search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nation"

    • நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
    • மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் தனியார் பள்ளி சார்பில் 1971-ம் ஆண்டு கால கட்டத்தில் பணியில் இருந்த போர் வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீரரைப் போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கலந்து கொண்டு முன்னாள் ராணுவ போர்வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும்போது "போர் வீரர்கள் நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்கள். அதேபோல் மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும், அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மேலும் இந்தியா ஒற்றுமைக்கு போர் வீரர்கள் மட்டும் காரணம் இல்லை, ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறையிலும் பணியாற்றுபவர்களும் முக்கிய காரணமாகும். நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.

    நாடு முழுவதும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #onenessandunity #Modi #ModiinManipur
    இம்பால்:

    பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் இன்று சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

    தலைநகர் இம்பால் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஹப்டா கங்ஜீய்பங் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மணிப்பூர் மன்னர் பாக்யசந்திரா பயன்படுத்திய தலைப்பாகையை அணிந்தவாறு பேசிய மோடி, மணிப்பூரி மொழியில் மக்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.



    பின்னர் மோடி பேசியதாவது:-

    இன்று தொடங்கப்படும் இந்த திட்டங்களால் மக்களின் வாழ்க்கைமுறை மிகவும் சுலபமாக மாறும். குறிப்பாக, குழந்தைகளும் விவசாயிகளும் பலனடைவார்கள்.

    முந்தைய மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தங்களுக்கும் டெல்லிக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பதாக மக்கள் கருதிவந்தனர்.

    எங்கள் ஆட்சியில் இந்த தூரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மணிப்பூரில் உள்ள கடைக்கோடி கிராமம்வரை மின்சார வசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

    டெல்லி தங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ளதாக மக்கள் நினைக்கும் வகையில் எங்கள் பணிகள் விரைவாக இருக்கும்.

    இங்குள்ள மக்களை சந்தித்து பேசுவதை நான் விரும்புகிறேன். உங்கள் நிலை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு நான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உங்களைப் பார்ப்பதில் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

    பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளேன். நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #onenessandunity #Modi #ModiinManipur

    வட கொரியாவின் 70-வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. #NorthKorea #70YearsCelebrate
    பியாங்யாங்:

    வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.



    இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், இரு துருவங்களாக கருதப்பட்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.



    அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.



    அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.



    இந்த நிலையில்தான், வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.



    இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

    அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.



    அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.

    இந்த விழாவில் கிம் ஜாங் அன் உரை ஆற்றவில்லை. அவரது வலதுகரமாக கருதப்படுகிற கிம் யோங் நாம் உரை ஆற்றினார். அவரது பேச்சில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் பற்றி எதுவும் இடம் பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவதுதான் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருந்தது.



    இந்த அணிவகுப்பை சீனா, ரஷியா, கியூபா நாடுகளின் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.



    அது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதிப்படி கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உலக அரங்கில் உருவாகி உள்ளது.   #NorthKorea #70YearsCelebrate
    ×