search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Michaung"

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    23-ந்தேதி வரை ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்று வந்துகூட பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக ரேஷன் கடைகளுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எந்த தேதி டோக்கனாக இருந்தாலும் பணம் வழங்கி விடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    • 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
    • விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்கள் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்குள், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று கோவையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

    கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடனும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

    அப்போது, மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை திரும்பியதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பயணத் திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

    • தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
    • மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'மிச்சாங்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

    2-வது நாளாக இன்று தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    மத்திய குழுவில் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

      பூந்தமல்லி:

      சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

      இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில்3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
      • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

      கோவை:

      முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

      இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

      தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

      சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

      இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

      தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
      • தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும்.

      சென்னை:

      தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது.

      அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை துவம்சம் செய்தது.

      இன்னும் அந்த வடு மறையாத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

      வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதன் காரணமாக தமிழ்நாட்டில் 18-ந்தேதியில் இருந்து 20-ந் தேதி வரையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், அதன்பிறகும் மழை தொடருவதற்கான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

      அந்தவகையில் தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

      இதற்கிடையே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

      அடுத்த 2 நாட்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பெரிய அளவுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.
      • வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

      சென்னை:

      மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

      மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

      இன்று மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.

      ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

      வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

      இதையடுத்து மத்திய குழு கூறுகையில்,

      மிச்சாங் புயல், மழை, வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி அளித்தனர்.

      • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.
      • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

      சென்னை:

      மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

      சென்னையில் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், அம்பத்தூர், முடிச்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உட மைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.

      மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்ததால் ரூ.5,060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

      இதையடுத்து கடந்த 7-ந்தேதி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியையும், சென்னை வெள்ளத் தடுப்பு சிறப்பு திட்டத்துக்காக ரூ.501 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியது.

      இதற்கிடையில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

      இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித் துறையை சேர்ந்த ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சேர்ந்த விஜயகுமார், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

      இந்த குழுவினர் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.

      இன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு புறப்பட்டார்கள். மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.

      ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

      வடசென்னைக்கு சென்ற குழுவினர் பெரியமேடு-புளியந்தோப்பு டிமலஸ் ரோட்டில் இருந்து தங்கள் ஆய்வை தொடங்கினார்கள். இங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

      அதைத்தொடர்ந்து பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் ரோடு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிய குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

      அதைத்தொடர்ந்து வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலை சந்திப்பு, ஓட்டேரி நல்லா, டிகாஸ்டர் ரோடு, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

      • சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
      • மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

      சுவாமிமலை:

      கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

      காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி கமிட்டியின் பாசறையை அமைத்து வருகிறோம்.

      சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று மழை பெய்தால் எந்த ஒரு நகரமும் தாங்காது. சென்னையை பொருத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.

      ரூ.4 ஆயிரம் கோடியை முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை அவர்களது தணிக்கை குழு முடிவு செய்யும். அதனை நம்மை போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
      • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

      சென்னை:

      சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

      கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

      தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

      இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

      பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

      தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

      பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

      மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

      இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      • மிச்சாங் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல மீள துவங்க இருக்கிறது.
      • புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

      மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. மிச்சாங் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

      இந்த நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

      இதுகுறித்து பேசிய அவர், "புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.

      • ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டினார்.
      • சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்பு வேண்டும்.

      மிச்சாங் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

      ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டி, சந்திரபாபு நாயுடு அதன் பாதிப்பை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

      இந்தச் சூழலில், "புயலின் தாக்கம் ஆந்திராவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து, மிச்சாங் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.

      மேலும், "770 கிமீ சாலைகள் சேதம் மற்றும் குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற வசதிகளில் கணிசமான பாதிப்புகளுடன் ரூ. 10 ஆயிரம் கோடி வரை பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

      பேரிடரை தேசிய பேரிடராக அங்கீகரிப்பது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு தேவையான உத்வேகத்தை வழங்கும், நீடித்த மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பை நிறுவும்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      ×