search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மிச்சாங் புயல் பாதிப்பு... ஒரு வாரத்தில் அறிக்கை: மத்திய குழு தகவல்
    X

    மிச்சாங் புயல் பாதிப்பு... ஒரு வாரத்தில் அறிக்கை: மத்திய குழு தகவல்

    • தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
    • மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'மிச்சாங்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

    2-வது நாளாக இன்று தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    மத்திய குழுவில் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×