search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள பாதிப்புகளை சிறப்பாக கையாண்டது: தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய குழு
    X

    வெள்ள பாதிப்புகளை சிறப்பாக கையாண்டது: தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய குழு

    • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.
    • வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

    இன்று மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.

    ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

    வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மத்திய குழு கூறுகையில்,

    மிச்சாங் புயல், மழை, வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×