search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியக்குழு ஆய்வு"

    • ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறின.
    • பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த பெருமழை வெள்ளத்தில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. டவுன் கருப்பந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆற்றுப்பாலம் உடைந்து விழுந்தது. மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இந்த பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி மத்திய குழுவினர் முதல்கட்டமாக நெல்லை வந்து ஆய்வு செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து 2-வது முறையாக இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தை சார்ந்த ரங்கநாதன் ஆதம், மின்சக்தி துறையை சேர்ந்த ராஜேஷ் திவாரி, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தை சேர்ந்த தங்கமணி, புதுடெல்லியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கே.எம். பாலாஜி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 குழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர்.

    இவர்களோடு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும், மழை உள்ள பாதிப்பு அடைந்த போதும், மழை வெள்ள பாதிப்புக்கு பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    பின்னர் மழை வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை 2 குழுக்களாக சென்று பார்வையிட்ட மத்திய குழு அதிகாரிகள் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்ட பாலத்தை ஆய்வு செய்தனர்.

    மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து 3 நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    அப்பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதிகாரிகள் மத்திய குழு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்றபோது, தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என என ஒரு வரியில் சொல்லி சென்றனர்.

    தொடர்ந்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் அதனை சரி செய்யப்பட்ட பணிகளையும், அம்பாசமுத்திரம், நெல்லை வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் செய்த பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    • தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
    • மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தேங்கிய தண்ணீரும் படிப்படியாக அகற்றப்பட்டு தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

    எனினும் பல்வேறு வீடுகள் இடிந்தும், சேதம் ஆகியும், வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் உள்ளது. இதேபோல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு தலா ஆயிரம் என நிவாரண தொகை அறிவித்து வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். மேலும் மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு மீண்டும் வருகிறது. அந்த வகையில் மத்தியஅரசின் பேரிடர் மேலாண்மை துறை நிர்வாகி மற்றும் ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொன்னுசாமி, விஜயக்குமார், ரங்கநாத் ஆதம், ராஜேஸ் திவாரி, தங்கமணி, பாலாஜி ஆகிய7 பேர் கொண்ட குழுவினர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் 14-ந் தேதி வரை 4 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். இதற்காக 11-ந் தேதி மதுரை வரும் மத்திய குழுவினர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள். அங்கு வெள்ளத்தால் சேதமான பயிர்கள், சாலைகள், வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்கிறார்கள். மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

    தண்ணீர் வடிய தொடங்கிய நிலையில் உடல்கள் ஆங்காங்கே பிணமாக மிதந்தபடி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் நெல்லை அருகே மானூர் காந்தீஸ்வரம் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார்.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேரும், வீட்டு சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் பலியாகி உள்ளனர்.

    மழை வெள்ள சேதங்கள் குறித்து நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி பல்வேறு சேதாரங்கள் கணக்கிட்டு விவசாய நிலங்கள், மீனவ படகுகள் சேதாரங்கள், உயிர்பலி எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தொகுப்பாக தயார் செய்து அதன் மூலமாக இழப்பீடுகளை வாங்குவதற்கு உண்டான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. குறைந்தபட்சம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. முழு விவரங்கள் விரைவில் தெரியவரும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம் என்.டி.ஆர்.எப் போன்ற பயிற்சி வாய்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஹெலிகாப்டர்கள் ஒரு நாளைக்கு தேவைக்கு தகுந்த மாதிரி அனுப்பப்படுகிறது. தற்போது 10 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை மீட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் ஈடுபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கம்பெனி ராணுவ படையினர் வந்து உள்ளனர். தேவை ஏற்பட்டால் முழு ஆதரவு கொடுப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக இன்று மதுரை வந்தடைந்தனர்.
    • தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி நீர் சென்றது.

    இதனால் ஆறு மற்றும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.இதனால் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் தனித்தீவாக மாறின.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் 4-வது நாளாக இன்றும் வெள்ளத்தில் மிதக்கிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

    மேலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் நீரில் முழ்கின. இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு அரசு துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தென் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக இன்று காலை மதுரை வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய குழுவினர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
    • மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'மிச்சாங்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

    2-வது நாளாக இன்று தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    மத்திய குழுவில் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.
    • வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

    இன்று மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.

    ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

    வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மத்திய குழு கூறுகையில்,

    மிச்சாங் புயல், மழை, வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி அளித்தனர்.

    • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    சென்னையில் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், அம்பத்தூர், முடிச்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உட மைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.

    மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்ததால் ரூ.5,060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியையும், சென்னை வெள்ளத் தடுப்பு சிறப்பு திட்டத்துக்காக ரூ.501 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியது.

    இதற்கிடையில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

    இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித் துறையை சேர்ந்த ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சேர்ந்த விஜயகுமார், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

    இந்த குழுவினர் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.

    இன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு புறப்பட்டார்கள். மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.

    ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வடசென்னைக்கு சென்ற குழுவினர் பெரியமேடு-புளியந்தோப்பு டிமலஸ் ரோட்டில் இருந்து தங்கள் ஆய்வை தொடங்கினார்கள். இங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

    அதைத்தொடர்ந்து பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் ரோடு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிய குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலை சந்திப்பு, ஓட்டேரி நல்லா, டிகாஸ்டர் ரோடு, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

    ×