என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது: கே.எஸ். அழகிரி
- சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
- மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி கமிட்டியின் பாசறையை அமைத்து வருகிறோம்.
சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று மழை பெய்தால் எந்த ஒரு நகரமும் தாங்காது. சென்னையை பொருத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடியை முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை அவர்களது தணிக்கை குழு முடிவு செய்யும். அதனை நம்மை போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






