search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் அடையாள அட்டை"

    • வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது.
    • புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:

    1. ஆதார் அட்டை

    2. பான் கார்டு

    3. ரேஷன் அட்டை

    4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்

    5. ஓட்டுநர் உரிமம்

    6. பாஸ்போர்ட்

    7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

    8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை

    9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை

    10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்

    11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை

    12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

    • அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது.
    • வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தோ்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவை எவை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த தோ்தல்களைப் போலவே, வரும் பாராளுமன்ற தோ்தலிலும் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையுடன் சோ்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.

    அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்த லாம்.

    அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக வாக்காளா் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டு வினியோகிக்கப்படும்.

    வாக்குச் சாவடியில் வாக்காளா் தகவல் சீட்டைக் காண்பித்து வாக்களிக்க முடியாது. அது அடையாள ஆவணம் இல்லை. ஒரு வாக்காளா் வேறொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கலாம். அந்த அடையாள அட்டையையும் இந்திய தோ்தல் ஆணையத்தின் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயா் வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.
    • பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    வாக்காளர் அடையாள அட்டை...

    இது சாத்தியமா...

    அதுவும் அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது என்பது எப்படி முடியும் என்று நினைத்திருந்த ஒரு காலம் உண்டு.

    ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1993-ம் ஆண்டு, நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தது.

    இமாலய சாதனை

    இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிவிட்டது. அதிலும் 94 கோடியே 50 லட்சத்து, 25 ஆயிரத்து 694 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக உள்ளனர். உலக அளவில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியாதான்.

    இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், அனைவருக்கும் வாக்களிக்க அடையாள அட்டை வழங்கி இருப்பது இமாலய சாதனைதான்.

    நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை உருவான வரலாறு பற்றி பார்ப்போம்.

    சுகுமார் சென்

    நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும், இவர் தான் வாக்காளர் என்று அறிவதற்கும், வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 1957-ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.

    இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்தான், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்ற விதையை போட்டவர்.

    அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக் குமார் சென். இவர், சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையாளராக கே.வி.கே.சுந்தரம் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியது.

    கொல்கத்தா இடைத்தேர்தலில் அறிமுகம்

    வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஏனோ தாமதாமாகிக் கொண்டே சென்றது.

    இருப்பினும் 1960-ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது.

    பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கே ரூ.25 லட்சம் வரை தேவைப்பட்டது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.

    தேர்தல் நடத்தும் செலவைவிட, வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    உயிர் பெற்ற திட்டம்

    19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.

    ஆம்!... 1979-ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இது ஓரளவு சாத்தியமானதால், அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993-ம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது.

    டி.என்.சேஷன்

    இதை செய்து காட்டியவர், அப்போது தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன். அவரது காலத்தில்தான், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

    பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம் (வாக்குச்சாவடி எண்) ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்ப காலங்களில், வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்த அட்டையில் இடம்பெறும்போது தெளிவற்றதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

    மின்னணு வாக்காளர் அட்டை

    பின்னர் அந்த தவறுகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது. தற்போது அழகிய வண்ணப்புகைப்படத்துடன், பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்துவிட்டது.

    மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது, வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தமுடியாத, பாதுகாப்பான 'பி.டி.எப்' பதிப்பாகும். மேலும் இதில் வரிசை எண், பகுதி எண் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன், பாதுகாப்பான 'கியூ-ஆர்' குறியீடும் உள்ளது.

    இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைக்கலாம்.


    வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?

    இந்தியாவில் பிறந்த 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    18 வயது நிறைவடைந்தவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 6-ஐ நிரப்பி, அதனை உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

    இது தவிர தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடத்தும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம்.

    மனநோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

    தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

    இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
    • சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.

    துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.

    இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.

    கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

    எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

    • முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
    • வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும்.

    சென்னை:

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும். பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளேயே ஒட்டப்படும்.

    அடையாள அட்டையின் முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகளை உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
    • 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் செம்மை யாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்கா ளர்களின் தனி தகவலை உறுதிப்படுத்தி டவும், ஒரு வாக்காளரின் விவ ரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்கா ளர்கள் தாமாக முன் வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும் இணைத்து வருகிறார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6பியில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்கா ளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத் தினை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட் டையுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காள ர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும்,ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணை க்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் ( VHA ) என்ற செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் .

    வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்கா ளர் உதவி மையம் மற்றும் இ - சேவை மையத்தினை அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம் .

    படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் வாக்காளர் பெயர், வாக்கா ளர் அடையாள அட்டை எண், சட்டமன்ற தொகுதி, ஆதார் அட்டை எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் .

    ஆதார் அட்டை இல்லை யெனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட த்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை,தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, இந்தியக் கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

    2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பணிகள் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளதால் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதேனும் மறுசீரமைப்பு பணிகள் இருப்பின் அது குறித்த விபரத்தினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர் ( சார் ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ) தெரிவிக்க வேண்டும்.

    மேலும் படிவம் 6 , 7 மற்றும் 8 ஆகிய படிவங்களில் சிறிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

    • நாளை மறுநாள் தொடங்குகிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி வாக்காளர் பட்டி யலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திட வும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதி யில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்க உத்தர விடப்பட் டுள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூல மாகவோ அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6-பியை பூர்த்தி செய்து கொடுத்தோ, தங்கள் பகுதிக் குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை அணுகியோ தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க 1.8.2022 முதல் பணி நடைபெறவுள்ளது
    • இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலிலுள்ள வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ளதா அல்லது ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதையும் கண்டறியவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது 1.8.2022 முதல் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விபரங்களை தன்விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis) தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தன்விருப்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டு இணைய தளங்களான www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்கள் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் இப்பணிக்கு வரும்போது தன்விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B - யினை பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர்களுக்கு ஆதார் எண் இல்லை என்ற அடிப்படையில், ஆதார் எண் தெரிவிக்க இயலாத இனங்களுக்கு படிவம் -6B -ல் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து அதன் நகலினை படிவம் 6B உடன் அளிக்கலாம்.

    1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை 2. வங்கி-அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குபுத்தகம் 3. தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5. நிரந்தர கணக்கு அட்டை (Pan Card) 6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாள சான்று 7. இந்திய கடவுச்சீட்டு 8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் 9. மத்திய, மாநில அரசு,பொதுத்துறை நிறுவனங்கள்,வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை 10. நாடாளுமன்ற,சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்அலுவலக அடையாள அட்டை 11. இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால்வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (UDID).

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலினை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர்கள் அனைவரும் தன்விருப்பத்தின் அடிப்டையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×