என் மலர்
நீங்கள் தேடியது "ஆதார் கார்டு"
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.
- பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது.
- நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது தேர்தல் ஆணையம். கடந்த ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
இதனால் பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது. இந்த திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் கார்டை பயன்படுத்தவும் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் தேர்தல் ஆணையம் சேர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். நேரில் மட்டுமின்றி ஆன்லைன் முறையிலும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய வக்கீல் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என ஆணையம் தெரிவித்திருந்தது.
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 1 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என ஆணையம் தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வார தொடங்கில் இந்த வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
- ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம்
இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து, 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கபட்டுள்ளது. .
இறந்தவர்களின் ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் UIDAI தெரிவித்துள்ளது.
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
- செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
புதுடெல்லி:
வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.
எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.
அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.
இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
- ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
- 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.
சென்னை:
இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.
கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.
ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.
இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.
- பாவூர்சத்திரத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
- சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடை பெற்றது. பாவூர்சத்திரம் துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் வரவேற்று பேசினார்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஓவியஆசிரியர் தமிழன் தொகுத்து வழங்கினார். முடிவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
- சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக குல்சார் கான் கருவேமூக்கு வந்தார்.
- குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.
ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய போன் கால் எதிர்பாராத விதமாக தவுலத்திற்கு வந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
தவுலத் பேச்சில் மயங்கிய குல்சார் கான் தனது வேலையை விட்டு விட்டு இந்தியா வரவேண்டும் என எண்ணினார். இதையடுத்து சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக கருவேமூக்கு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி தவுலத்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.
இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் சம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், குல்சார் கான் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வந்து 9 ஆண்டுகளாக தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் தவுலத் வீட்டு வேலைகள் செய்து கொண்டு தனது 5 குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய சகோதரியுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார். 6 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த குல்சார் கானை போலீசார் மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார். அவருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.
- போலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நல்லூர் செல்லும் பஸ்நேற்று மதியம் நபஸ் நிலையம் வந்தது. இந்தப் பஸ்சில் ஏறுவதற்கு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மனைவி அஞ்சலம் (65) செல்போன், ஆதார்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, 2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் திட்டக்குடியை அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி மந்த்ராதேவி (35) என்ற பெண்ணிடமிருந்து பான்கார்டு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய 2பேர்களிடம் பையிலிருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட னர். யாரும் போலீசாரிடம் சிக்க வில்லை. திட்டக்குடி பஸ் நிலையத்தில் பெண்களிடம் பணம், நகை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பறித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் ேபாலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜோசிமோளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி அறிந்தார்.
- மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கலெக்டர் விக்னேஸ்வரி ஆகியோர் ஜோசிமோளுக்கு ஆதார் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமாரகம் புத்தன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோசிமோள். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.
அரிய வகை நோய் பாதித்த ஜோசிமோளின் 2 கை விரல்களும் சிதைந்தன. இதனால் கை விரல்கள் இல்லாமலேயே வாழ்ந்து வந்தார். கை விரல்கள் இல்லாததால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.
உடல்நலம் பாதித்து படுத்த படுக்கையாக இருந்த நிலையில், அரசால் கிடைக்க வேண்டிய உதவி எதுவும் கிடைக்காததால் ஜோசிமோள் மன உளைச்சலுக்கு ஆளானார். ஜோசிமோளின் இந்த நிலை குறித்து மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி அறிந்தார்.
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கலெக்டர் விக்னேஸ்வரி ஆகியோர் ஜோசிமோளுக்கு ஆதார் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள், ஜோசிமோளின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆதார் கார்டுக்கு தேவையானவற்றை பதிவு செய்தனர்.
இதனால் ஜோசிமோள் ஆதார் கார்டு பெறுவதற்கான சிக்கல் தீர்ந்தது. அவருக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அவர் ஆதார் கார்டை பெற உள்ளார். இதன் மூலம் அரசு வழங்கக்கூடிய உதவிகள் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.
- 100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.
புதுடெல்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள் வேலை) திட்டத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த திட்ட பயனாளிகள் ஆதாரை இணைப்பதற்கு வழங்கப்பட்ட 5-வது காலக்கெடு நீட்டிப்பு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்து இருக்கிறது.
அதன்படி இனிமேல் 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்பு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர்.
கடந்த டிசம்பர் 27-ந் தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாக கொண்ட அமைப்பை பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.
உண்மையில், ஆதாரை அடிப்படையாக கொண்ட சம்பள அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பல துறை சார்ந்த வல்லுனர்களின் கவலைகளுக்கு மோடி அரசு செவிமடுக்கவில்லை.
கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைக்கும் பிரதமரின் கொடூரமான புத்தாண்டு பரிசு இது.
100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.
ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்.
இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சமூக தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
- அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.
தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.
கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.
உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.
இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.
இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.
500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.
இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.
சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.
இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.
அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .
அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






