search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copy"

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
    • சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.

    துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.

    இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.

    கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

    எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

    • எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது.
    • ஆதார், ரேஷன் நகல், சிட்டா நகல்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாமாயில் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு மாநில அளவில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் எண்ணெய் பனை சாகுபடிக்குஏற்ற மண் வகையும், தட்பவெ ப்பநிலையும் உள்ளது.

    இதன் காரணமாக தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய எண்ணெய் பனை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மேற்கண்ட வட்டாரங்களில் புதிய எண்ணெய் பனை பரப்பு விரிவாக்கத்திற்கு 300 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ரூ.60 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எண்ணெய் பனையானது மற்ற தோட்டக்கலைப் பயிர்களை ஒப்பிடும் போது அதிக மகசூல் தரக்கூடியது. எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது 10 நாட்கள் கழித்து நடவு செய்தல் வேண்டும். நடவின்போது 9 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலம் இடைவெளி விட்டு நடவு செய்தல் வேண்டும்.

    அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை காய்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 13 டன் மகசூல் தர வல்லவை. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமான கோத்ரெட்ஜ் அக்ரோவேட் மூலம் எண்ணெய் பனை காய்கள் குளங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஆண்டிற்கான வருமானம் 1.8 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஒரு எக்டர் நிலத்திலிருந்து விவசாயிகள் வருமானம் ஈட்டலாம்.

    புதிதாக எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் உள்ள எண்ணெய் பனை நாற்றுகள் 143 எண்கள் மற்றும் இடுபொருட்கள் முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இந்த திட்டத்தில் புதிதாக பயனடையுள்ள பயனாளிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 2.5 லட்சம் மதிப்பிலான போர்வெல் மானியம், மோட்டார் மானியம், அறுவடை முன்சார் மற்றும் பின் சார் எந்திரக் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    ஆர்வமுள்ள விவசாயிகள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் வர தேவையான ஆவணங்களான பாஸ்போ ர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    நிறை தொடர்புக்கு தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வி 9943422198, ஒரத்தநாடு வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் சாந்தி பிரியா 9488945801, பாபநாசம் வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன் 9445257303, பட்டுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி 9597059469 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள புது ஆற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

    ×