என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "court order"
- புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
- அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்ப ட்டது.
இதனையடுத்து நீதிபதி, மனுதாரரின் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அதற்கான ரசீதை விசா ரணை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார்.
- நெல்லையப்பர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
- கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என பணியாளர்கள் கூறினர்.
நெல்லை:
கோவில்களில் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இதனை ஒட்டி இந்து சமய அறநிலைய துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோவில்களில் வழிபட வரும் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்து கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
விரைவில் டோக்கன் வழங்கி பக்தர்களின் செல்போன்கள் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்றும், இனி கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என்று அவர்கள் பக்தர்களிடம் அறிவுறுத்தினர்.
- 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- நீர்நிலையில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கண்மாயில் குவாரி அமைத்து, கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. இந்த கிராவல் மண்ணை திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்த 25.2.2022 வரை காண்டிராக்டர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் சாலை அமைக்க கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, இரவும், பகலும் புளியங்குளம் கண்மாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர். இதற்காக கண்மாயில் இருந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வெளியேற்றினர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டோம். சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பின்பும், குறிப்பிட்ட கால அனுமதியை தாண்டி, தற்போதும் அந்த குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகி விட்டது.
எனவே புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 மாதம் மட்டும் அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பலமாதங்களாக குவாரியில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிராவல் மண் எடுக்க அனுமதித்த அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக எதன் அடிப்படையில் மண் அள்ளப்படுகிறது? இதை ஏற்க இயலாது. அந்த குவாரியில் கிராவல் மண் எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியிலும் கே.டி.ஜலீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு. கே.டி.ஜலீல் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
- காண்டிராக்டர் கொலை வழக்கை விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்தனர்.
மதுரை
நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்திவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலை பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.
இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே கண்ணன் கொலை வழக்கைவிரைவாக விசாரித்துமுடிக்கவும், அதுவரை குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள்.
எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
- இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் பணியாளருக்கு உரிய காப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்துக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்துறையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டளை இளநிலை பணியாளராக பணிபுரிபவர் பழனிவேல்(50). இவர், தனது மனைவி,மகன் என குடும்ப உறுப்பினர் அனைவருக்கும், யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்தில் குடும்ப நல காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவரின் அறிவுரையுடன் கதிரியக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பழனிவேலுக்கு காப்பீடு தொகையான ரூ.1,36,361ஐ 30 நாள்களுக்குள் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உரிய சிவில் நீதிமன்றம் மூலம் 6 சதவீத வட்டியுடன் காப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வானூர்:
புதுவை- திண்டிவனம் 4 வழிச்சாலையில் மொரட்டாண்டி என்ற இடத்தில் டோல்கேட் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
புதுவை நகர பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டோல்கேட்டுக்கு புதுவைபகுதியை சேர்ந்த வணிகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானூர் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் மகேஷ், அய்யப்பன் மற்றும் பரசுராமன், சத்தியராஜ், ஞானமூர்த்தி ஆகியோர் வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், புதுவை - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் டோல்கேட் உள்ளது. ஆனால் விதிப்படி புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைத்திருக்கவேண்டும்.
ஆனால், 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே, டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வெங்கடேசன், வருகிற 20-ந் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால உத்தரவை கோர்ட்டு ஊழியர் கொடுத்த போது, அதனை டோல்கேட் நிர்வாகத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவு, டோல்கேட் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து டோல்கேட் வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
புதுடெல்லி:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22-ந்தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. அதே சமயம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
நவம்பர் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22-ந்தேதி விசாரிப்பதாக ஏற்கனவே கூறி விட்டோம். அப்போது மட்டும்தான் விசாரிக்க முடியும். அதற்கு முன் இது தொடர்பாக எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவோ முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
மும்பை:
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டம் மும்பை புறநகரில் நடந்தது.
ஆம் ஆத்மி வேட்பாளர் மீரா சன்யாலை ஆதரித்து நடந்த இந்த பேரணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சமூக சேவகர் மேதா பட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்தியதாகவும், ஒலி பெருக்கி பயன்படுத்தியதாகவும் மராட்டிய போலீசாரால் சட்டப் படி கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது மாதிரியான குற்றச்சாட்டுக்கு 8 நாட்கள் சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
இந்த வழக்கு மும்பை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு பி.கே.தேஷ் பாண்டே முன்னிலையில் நடந்தது.
இந்த வழக்கில் கெஜ்ரிவால், மேதாபட்கர், மீரா சன்யால் உள்பட 8 பேரை விடுவித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததற்காக எழுத்துபூர்வமான அறிக்கையை போலீஸ் தாக்கல் செய்யாததை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மின்னணு சான்றுகள், சாட்சிகளின் வாக்கு மூலம் ஆகியவற்றையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாலும் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். #ArvindKejriwal #Election
நகரி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை, பெணமலூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பொடே பிரசாத் அவதூறாக பேசி பேட்டி கொடுத்தார்.
இதையடுத்து ரோஜா போலீசில் பொடெ பிரசாத் மீது புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர் பாக ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய பொடே பிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும், பொடே பிரசாத் பேசிய சிடியையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், பெண் எம்.எல்.ஏ.வான ரோஜா பற்றி பொடே பிரசாத் தரக் குறைவாக பேசி இருக்கிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.#ActorRoja #TeluguDesamParty
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ரெயில் பயணி வெங்கடாசலம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர் வரும் ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது அவரை எலி கடித்துவிட்டது. இதனால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. கடுமையான வலியும் ஏற்பட்டது. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தும் எந்த முதல்உதவியும் அளிக்கப்படவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்.
இதனால் ரெயில் எழும்பூர் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசிலும் அதிகாரிகளிடமும் புகார் செய்தார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வெங்கடாசலம் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார்.
எலி கடித்த வேதனை ஒருபுறம், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவித்தது ஒருபுறம் என பல வழிகளில் துன்பத்துக்கு ஆளான வெங்கடாசலம் இதுபற்றி நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு கேட்டு இருந்தார்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி ஆர்.வி. தீனதயாளன், உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். இதில் ரெயில் பயணிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அசவுகரியத்துக்காக அவருக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மேலும் மருத்துவ செலவு ரூ. 2 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரம் சேர்த்து ரூ. 32 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் 3 மாதத்தில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்