search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்
    X

    புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்

    • புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்ப ட்டது.

    இதனையடுத்து நீதிபதி, மனுதாரரின் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அதற்கான ரசீதை விசா ரணை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும்.

    மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார்.

    Next Story
    ×