search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம் உத்தரவு"

    • 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல்.
    • விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சேவை குறைபாடு காரணமாக செல்போன் நிறுவனம் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • செல்போனை சரி செய்து தரவும் இல்லை.

    அரியலூர்:

    அரியலூர் மின் நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் அரியலூரில் உள்ள தனியார் செல்போன் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் செலுத்தி புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் அந்த செல்போன் வாங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் அதனை கொடுத்தபோது 2 முறையும் தற்காலிகமாக பழுதை நீக்கி கொடுத்துள்ளார்கள். மீண்டும் செல்போனின் பழுது ஏற்பட்டதால் புதிய செல்போனை வழங்குமாறு மோகன் கேட்டு உள்ளார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட விற்பனையாளர் செல்போனை சரி செய்து தரவும் இல்லை. புதிய போன் வழங்கவும் இல்லை.

    இதையடுத்து அரியலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த நிறுவனம் மோகனுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக அவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

    • தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
    • இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் பணியாளருக்கு உரிய காப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்துக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    செந்துறையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டளை இளநிலை பணியாளராக பணிபுரிபவர் பழனிவேல்(50). இவர், தனது மனைவி,மகன் என குடும்ப உறுப்பினர் அனைவருக்கும், யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்தில் குடும்ப நல காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவரின் அறிவுரையுடன் கதிரியக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பழனிவேலுக்கு காப்பீடு தொகையான ரூ.1,36,361ஐ 30 நாள்களுக்குள் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உரிய சிவில் நீதிமன்றம் மூலம் 6 சதவீத வட்டியுடன் காப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ×