search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chairman"

    • காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
    • 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் முயற்சியால், காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது'' என மத்திய காதி கிராம தொழில் ஆணைய தலைவர் தெரிவித்தார். மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காதி கிராம தொழில் ஆணையம் சார்பில், மாநில அளவிலான காதி நிறுவனங்களின் விற்பனை கண்காட்சி திருப்பூரில் நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    காதி கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ்குமார் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மேலும், பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற்ற புதிய தொழில் முனைவோருக்கு மானிய தொகை விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆணையத்தின் மாநில இயக்குநர் சுரேஷ் வரவேற்றார். தென் மண்டல துணை முதன்மை நிர்வாக அலுவலர் பாண்டே, திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மதுரை மண்டல இயக்குநர் அசோகன், திருப்பூர் சர்வோதய சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் பேசியதாவது:- பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் பெரும் முன்னேற்றம் பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாய் விற்பனை இலக்கு எட்டியுள்ளது. கிராம தொழில் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி தொழிலுக்கு 50 லட்சம் ரூபாய்; சேவை தொழிலுக்கு 20 லட்சம் ரூபாய் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 1,432 பேருக்கு 51.42 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவதற்குப் பதிலாக வேலை வழங்குவோராக மாற வேண்டும் என்ற பிரதமரின் பேச்சு அனைவருக்கும் ஊக்க மளிப்பதாக உள்ளது. அவ்வகையில் கிராம தொழில்கள் இன்று பெருமளவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தேனீ வளர்ப்போர் 11,750 பேருக்கு 1.75 லட்சம் தேனீப் பெட்டி; மண் பாண்ட உற்பத்தியாளர் 24,410 பேருக்கு பேட்டரி சக்கரம்; 3,316 ேபருக்கு தோல் பொருள் உற்பத்தி பயிற்சியும், 700 பேருக்கு கருவிகளும், 1,560 பேருக்கு அகர்பத்தி உற்பத்தி கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    காதி மற்றும் கைவினை பொருள் உற்பத்தியாளர் வருவாய் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்தி இன்று உள்நாட்டு அளவிலான உற்பத்தியாக மாறியுள்ளது. உலக அளவில் இதன் விற்பனையை கொண்டு செல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    • சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
    • சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர் அ.தி.மு.க.வில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கட்சி பணியோடு சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் முனைப்பு காட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் ஈட்டும் வருமானத்தை கட்சி பணிக்கு அப்பாற்பட்டு கோவில் கட்டுதல், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுத்தல், ஏழை-எளிய மக்களுக்கு திருமண உதவி செய்தல் போன்ற பல்வேறு அறப்பணிகளில் முழுமையாக அர்ப்பணிக்கும் மனிதராகவும் இருந்து வருகிறார்.

    கொரோனா நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களின் ஒவ்வொ ருவரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அவர்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.

    இவரின் இத்தகைய செயல் இந்த பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கட்சி மேலிடத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் பொன்மணி பாஸ்கரன் மெல்ல மெல்ல அசுர வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்து தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட பேரவை துணைச் செயலா ளராகவும்பதவி வகித்து வருகிறார்.

    இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள திருமண மகாலில் மகள் ஹரிப்பிரியா-ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நடந்தது. அதனுடைய வரவேற்பு விழாவை, தான் பிறந்த ஊரில் வைக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

    அதற்காக பிரமா ண்டமாக ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்டம் குன்னத்தூரில் அருகே உள்ள ஓ.வி.எம். கார்டனில் நடந்தது.

    வரவேற்பு விழாவில் முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

    திருமண வரவேற்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்கள் சார்பில் சீர் செய்யும் விழா நடத்தினர். சுமார் 504 ஆட்டுக்கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை குன்னத்தூர் கண்மாய் கரை சாலை நெடுகிலும் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் திருமண வரவேற்பு பந்தலுக்கு கொண்டு வந்தனர்.

    சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    விழாக்கோலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் சீர் எடுத்து வந்தது காண்போர் மத்தியில் ஆனந்தத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.

    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம்.
    • திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார்.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அதன்படி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக கிரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

     இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன்  நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு பல்லடம், காங்கேயம், தாராபுரம்ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நமது கட்சியில்பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறுஅந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதியுடையவர்.
    • ஜனநாயக முறைப்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சை, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் மருத்துவ கல்லூரி பகுதி முன்னாள் செயலாளருமான சரவணன் வரவேற்றார்.

    அம்மா பேரவை இணை செயலாளரும் மாவட்ட பால்வளத் தலைவருமான காந்தி, மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், திராவிடன் நகர கூட்டுறவு சங்க தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிங். ஜெகதீசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குடந்தை மண்டல செயலாளர் திருநீலகண்டன், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகர், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மகளிர் அணி சித்ரா அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் பொது கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் எம்.எல்.ஏ, கொள்கை பரப்பு துணை செயலாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகை செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க வர வேண்டும். அந்த வகையில் தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதி உடையவர்.

    அண்ணா கற்று கொடுத்த ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் ஒற்றை தலைமை வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.

    அனைவரின் விருப்பப்படியும் ஜனநாயக முறைப்படியும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட எம்.பி, எம்.எல்.ஏ .ஆகவும், ஆட்சி அதிகாரத்திற்கும் வர முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் பேசும்போது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகளை எல்லாம் தாங்கி 4 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தினார்.

    விரைவில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.

    இந்த கூட்டத்தில், தலைமை பேச்சாளர் ரத்தினவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மருதராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூவை செழியன், சி.வி. சேகர், கோவிந்தராஜன், ரத்தினசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மருத்துவர் அணி தங்க கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கணபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் தம்பிதுரை, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற ரெத்தின சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், அ.தி.மு.க. பிரதிநிதி மோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், மாணவரணி முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி வாஞ்சிநாதன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், காந்திமதி நவநீதகிருஷ்ணன், கலைவாணி சிவகுமார், தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது.
    • பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகா காமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகராட்சி முத்துசாமி பூங்கா வளாகத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் நாட்டிய கல்லானது யாராலும் கண்டு கொள்ளப்படாமல் சாதாரண நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

    சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் குமரிஅனந்தன் இங்கு வந்து சாலையில் கிடந்த கல்லை எடுத்து நகராட்சியில் ஒப்படைத்து நீங்கள் இதனை பத்திரமாக வைக்க வேண்டுமென்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.

    சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது. ஆனால் அடிக்கல் நாட்டிய கல், கண்டு கொள்ளப்படாமல் இன்றுவரை நகராட்சியிலே கிடைக்கின்றது. இதனை வாஞ்சி மணி மண்டபத்தின் முன்பு நிலை நிறுத்த வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகாகாமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயலாளா் ஆலங்குளம்செல்வராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதர், மாவட்ட துணைத்தலைவா்கள் ராம்மோகன், மேலநீலிதநல்லூர் மனோகா், கிளாங்காடுமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் ரெசவுமுகம்மது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவா் சுரேஷ், துணைத்தலைவா் பால்சாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவா் சட்டநாதன், செங்கோட்டை வட்டார தலைவா் கார்வின், வட்டாரத்துணைத்தலைவா்கள் கதிரவன், கட்டளைராமர், செங்கோட்டை நகரத்தலைவா் இராமர், துணைத்தலைவா் கோதரிவாவா, செயலாளா் இசக்கியப்பன், இளைஞரணி தலைவா் சங்கரலிங்கம், செயலாளா் ராஜீவ்காந்தி, வார்டு தலைவா்கள் கோட்டைச்சாமி, கந்தவேல்முருகன், கடையநல்லுார் நகரகாங்கிரஸ் செயலாளா்கள் யூசூப், நவாஸ்கான், கேப்டன்கோதரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆவின் சேர்மனும், மாவட்ட பேரவை செயலாளருமான அசோகன், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4,800 மாணவர்களுக்கு ரூ.106 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ரூ.120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கல்வித்திருவிழா நடத்தி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும், கல்விக்கடன் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கங்களை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 46 ஆயிரம் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலி ருந்தே வேலை யின்மையின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்ட ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #CharimanSivan
    புதுடெல்லி:

    சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்ட ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #CharimanSivan

    விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசும்போது, பிரதமர் மோடி கூறினார்.

    இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) தலைவர் சிவன், செய்தியாளர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டுக்கு பிரதமர் வழங்கிய மிகச்சிறந்த பரிசுதான், ‘ககன்யான்’ திட்டம் ஆகும். இந்த திட்டம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாகவும் அமையும்.

    தேசிய திட்டமான இந்த ககன்யான் திட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அகாடமிக்கள் மற்றும் தொழில்துறையினர் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைவதுடன், தேசத்தின் பெருமையும் உயரும்.

    இது ஒரு பெரிய அறிவிப்பு ஆகும். 2022-ம் ஆண்டுக்குள் இந்த சாதனையை எட்டிப்பிடிப்பது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சவால்தான். ஆனாலும் அதை நாங்கள் செய்து முடிப்போம். ஏனெனில் இந்த திட்டத்தின் 60 முதல் 70 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன.

    அதன்படி வீரர்கள் இருக்கும் பகுதி, வீரர்கள் தப்புவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, உயிர்காக்கும் கருவிகள் மற்றும் விண்வெளி உடைகள் போன்ற தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் ஏற்கனவே நாங்கள் தயாரித்து விட்டோம். அத்துடன் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டையும் நாங்கள் வடிவமைத்து உள்ளோம்.

    இதற்கான கட்டுப்பாட்டு மையம், ஏவுதளம் மாற்றி அமைப்பு, கருவிகள் இணைப்பு போன்ற சில கட்டமைப்பு பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. இவையும் கடினமான பணி அல்ல.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், 2 ஆளில்லா விண்கலங்களை இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தி சோதனை மேற்கொள்வோம்.

    இவ்வாறு சிவன் கூறினார்.  #ISRO #CharimanSivan #Tamilnews 
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தனது அரசியல் பயணத்தை குறித்து விளக்கம் அளிக்கிற வகையில் வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். #Musharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தற்போது துபாயில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் கட்சியின் புதிய தலைவர் முகமது அம்ஜத். அரசியலில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்து பெஷாவர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முஷரப் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இதையடுத்து முஷரப் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரோ என்று யூகங்கள் எழுந்தன.

    இதற்கு விளக்கம் அளிக்கிற வகையில் முஷரப், வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.

    கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?

    நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.

    சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார். 
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

    இந்த வாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
    #CauveryManagementAuthority
    ×