search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைவர், கவுன்சிலர்கள் 6½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்-பரபரப்பு
    X

    தலைவர், கவுன்சிலர்கள் 6½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்-பரபரப்பு

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×