search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு தொகுப்பு"

    • முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
    • நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் உள்ள ரேசன் கடையில் கடந்த 10-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக சுதா என்பவர் பணியாற்றி வருகிறார் . ஆனால் அவருக்கு பதிலாக அவரது தந்தை முனிகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாராம். நேற்றும், முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .

    அப்போது, அங்கு சென்ற ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ரஜினிகாந்த், அவரிடம் கடையின் விற்பனையாளர்தான் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபமடைந்த முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பணம் கட்டுகளை எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்காமல் அங்கிருந்து சென்று விட்டார். கடையில் பொருட்கள் எல்லாம் அப்படியே கிடக்க, பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்க சென்ற ஏராளமான குடும்ப அட்டைதார்கள் 2 மணி நேரமாக கடையின் வாசல் முன்பு காத்து கிடந்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், காத்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். அப்போது அங்கு வந்த முனி கிருஷ்ணனை அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த கடையில் விற்பனையாளருக்கு பதிலாக அவரது தந்தை பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி வருவதாகவும், பொது மக்களை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முனி கிருஷ்ணன் தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.
    • புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    சென்னை:

    புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்க தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசானது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு, ரொக்கப் பணம் தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரொக்கப்பணம் ரூ.1000, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    ஆனாலும் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும்? என எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பும் தொடங்கி வைக்கப்பட்டு விடும்.

    ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில் 'மிச்சா' புயல் வந்த காரணத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    இந்த மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.

    அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இன்னும் பணம் போய் சேரவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் தான் பணம் அனுப்பப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் வெள்ளம் பாதிக்காத மாவட்டங்களில் உள்ள மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.


    ஆனாலும் அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை மிக விரைவில் அறிவிக்கும். வெள்ள நிவாரணத்தால்தான் இந்த அறிவிப்பு தாமதமாகி உள்ளது.

    புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது.
    • டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தற்போது மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு கிடைக்கும் உறுதி மிக்க மண்ணால் எளிதில் உடையாத வகையில் மண்பாண்ட பொருட்கள் ஆண்டு முழுவதும் தயார் செய்யப்பட்டு வருகிறது .

    மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. மானாமதுரையில் குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியிலும் திருப்புவனம், வயல்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது. ஆண்டு முழுவதும் விதவிதமான மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.

    இதில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கிளியான் சட்டி எனப்படும் தீபவிளக்குகள் ஆகும். அடுத்து மண்பானை மற்றும் கூஜா கோடைகாலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பூஞ்ஜாடிகள், தொட்டிகள் அதிகம் செய்யப்படுகிறது

    மண்பானைகள் மட்டுமின்றி களிமண் பொம்மைகள், சரவிளக்குகள், துளசி மாடங்கள், விநாயகர் சிலை, தீப விளக்குகள், கொலு பொம்மைகள், அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், ஊறுகாய் ஜாடி என விதவிதமாக தயாரிக்கின்றனர்.

    ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மண் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கர்நாடக இசைக்கலைஞர்கள் அதிகமாக பயன்படும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராம் மானாமதுரை மண்கடத்தை ஐ.நா. சபைபில் வாசித்து மானாமதுரைக்கும் ஆதி இசைகருவியான கடத்திற்க்கு புகழ் சேர்த்தார்.

    டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.

    தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமாகவும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமும் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த மானாமதுரை மண்பாண்டத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மண்பாண்ட தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களை தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிலாளர் சங்க தலைவர் லட்சுமணன் கூறுகையில், களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சேர்த்து தரமான மண்பாண்ட பொருட்களை எங்கள் பகுதியில் செய்து வருகிறோம். தனித்துவம் வாய்ந்த மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    அரசு சார்பில் உள்ள வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும், வளர்க்கப்படும் மரகன்றுகளை மண்வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சிறிய பூ தொட்டிகளில் வளர்க்க வேண்டும். இதற்கு அரசு உத்தரவிடவேண்டும்.

    முன்பு மானாமதுரை கடத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது புவிசார் குறியீடு கிடைத்தது மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    • 1077 நியாயவிலைக் கடைகளில் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • 4,66,594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் 2023 சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் என மொத்தம் 4,66,594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் 2023 சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் 9.1.2023 அன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு 2023 வழங்கிட விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 463 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 572 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 42 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1077 நியாயவிலைக் கடைகளில் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் 74,368 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 59,242 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில் 67,297 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 52,673 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் 73,455 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரூர் வட்டத்தில் 61,082 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 78,477 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000- ரொக்கம் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவருக்கும் பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டு கடந்த 9ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடிமை பொருள் வழங்கலோடு விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அரிசி பெறும் கார்டுதாரர் அனைவருக்கும் பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டு கடந்த 9ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு முன் வரை 97 சதவீதம் பேருக்கு அதாவது 7 லட்சத்து 70 ஆயிரத்து 914 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு பொங்கலுக்குப்பின் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூரில் உள்ள ரேஷன்கடைகளில் வழக்கமான குடிமை பொருள் வழங்கலோடு விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் விடுபட்ட அனைவருக்கும் தொகுப்பு வழங்கி முடிக்க ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் 26,130 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டி உள்ளது.

    • பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது.
    • நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப்பணம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் கடந்த 9-ந்தேதி தொடங்கி வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்தார்கள்.

    மக்கள் நெரிசல் இல்லாமல் வாங்கிச்செல்ல ஏதுவாக டோக்கன் வழங்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    பொங்கல் தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 4 நாட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் வாங்கிச்சென்று விட்டனர். முதல் நாளில் 25 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    2 கோடி குடும்ப அட்டைதாரர்களில் நேற்று வரை 82 சதவீதம் பேருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதாவது ஒரு கோடியே 70 லட்சம் பேர் நேற்று மாலை வரை தொகுப்பை பெற்றுள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்குவது இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

    பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது. நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    பொங்கலுக்கு பிறகு வழங்கப்படுமா? நாளையுடன் நிறைவடையுமா? என்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.

    பொங்கல் தொகுப்பு எவ்வித குளறுபடியும் இல்லாமல் இந்த முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுப்பில் இடம்பெற்ற பச்சரிசி தரம் வாய்ந்தவையாகவும், வழங்கப்பட்ட முழு நீள கரும்பு நன்றாக இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
    • பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.

    அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கரும்பு மற்றும் ரொக்கம் 1000 உள்ளிட்டவற்றை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை நல்லம்பள்ளி தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மணி, கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் முனுசாமி, து.தலைவர் சக்தி, முருகன், வீரமணி, ஜம்பேரி அருணகிரி, மாது, ரங்கநாதன், கிருஷ்ணன், முருகேசன், மந்திரி (எ) கிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குரங்கணி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கி பரிசு தொகுப்பினை வழங்கினார்

    தென்திருப்பேரை:

    குரங்கணி ஊராட்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பயனாளிகள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி சென்றனர்

    • சாயல்குடி, கடலாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.



    சாயல்குடியில் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், மேலக் கிடாரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நகர் இளைஞரணி செய லாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி கன்னியம்மாள், சண்முகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், வகிதா சகுபர், மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், வார்டு செயலாளர் கென்னடி, கிளைச் செயலாளர் மாரியூர் ஜமால், காசி, காவா குளம் முருகேசன், மேலக் கிடாரம் பழனிச்சாமி, ஒப்பிலான் இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரிப்பையூர், கன்னிராஜ புரம், செவல்பட்டி, எஸ். தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    இதில் ஊராட்சித் தலைவர்கள் செஞ்சடை நாதபுரம் லிங்கராஜ், காணி ஒக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ.புனவாசல் ராஜேந்திரன், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். தரைக்குடி முனியசாமி, டி. வேப்பங்குளம் முருகன், எஸ்.வாகைக்குளம் ஜெயலட்சுமி வடமலை, முன்னாள் உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பால கிருஷ்ணன், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடலாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். கடலாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடலாடி, புனவாசல், ஓரிவயல், கருங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது
    • முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது

    ஈரோடு,

    பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க ப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர்.

    சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி னார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு கொல்லம்பாளை யம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்கன்வாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதல்- அமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி கரும்பு, ரூபாய் ஆயிரம் கார்டுதா ரர்களுக்கு வழங்க உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலை கடைகளும் 319 பகுதிநேர கடைகள் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்க ப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பி ற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாது காப்பாக பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்று வரு கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.

    • சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
    • அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரொக்கம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

    தொடர்ந்து இன்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1077 நியாய விலை கடைகளில் உள்ள 4,66, 594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தருமபுரி அடுத்த அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வு 5 நாட்கள் நடைபெறும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் 5 நாட்களும் இந்த பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், கூட்டுறவு பதிவாளர் ராமதாஸ், ஊராட்சி மன்றத்தலைவர் மாரியம்மாள் முனிராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×