search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj grand daughter"

    • சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது.
    • பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகா காமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகராட்சி முத்துசாமி பூங்கா வளாகத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் நாட்டிய கல்லானது யாராலும் கண்டு கொள்ளப்படாமல் சாதாரண நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

    சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் குமரிஅனந்தன் இங்கு வந்து சாலையில் கிடந்த கல்லை எடுத்து நகராட்சியில் ஒப்படைத்து நீங்கள் இதனை பத்திரமாக வைக்க வேண்டுமென்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.

    சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது. ஆனால் அடிக்கல் நாட்டிய கல், கண்டு கொள்ளப்படாமல் இன்றுவரை நகராட்சியிலே கிடைக்கின்றது. இதனை வாஞ்சி மணி மண்டபத்தின் முன்பு நிலை நிறுத்த வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகாகாமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயலாளா் ஆலங்குளம்செல்வராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதர், மாவட்ட துணைத்தலைவா்கள் ராம்மோகன், மேலநீலிதநல்லூர் மனோகா், கிளாங்காடுமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் ரெசவுமுகம்மது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவா் சுரேஷ், துணைத்தலைவா் பால்சாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவா் சட்டநாதன், செங்கோட்டை வட்டார தலைவா் கார்வின், வட்டாரத்துணைத்தலைவா்கள் கதிரவன், கட்டளைராமர், செங்கோட்டை நகரத்தலைவா் இராமர், துணைத்தலைவா் கோதரிவாவா, செயலாளா் இசக்கியப்பன், இளைஞரணி தலைவா் சங்கரலிங்கம், செயலாளா் ராஜீவ்காந்தி, வார்டு தலைவா்கள் கோட்டைச்சாமி, கந்தவேல்முருகன், கடையநல்லுார் நகரகாங்கிரஸ் செயலாளா்கள் யூசூப், நவாஸ்கான், கேப்டன்கோதரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×