search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணைய தலைவர்"

    • 2022-23ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
    • கைவினைக்கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்குகொண்டு செல்லும் வகையில் காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன் வைத்துள்ளது. 2013-14ம் நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருட்களின் விற்பனை 2022-23ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக்கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறும் போது, நிதியாண்டு 2013-14ம் ஆண்டு முதல் 2022-23ம் ஆண்டு வரை காதி மற்றும் கிராமத் தொழில் துறை பொருட்களின் உற்பத்தி 268 சதவீதம் அதிகரித்ததோடு 332 சதவீதமாக விற்பனை உயர்ந்தது. மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 9 சாதனைகளை படைத்துள்ளது. 2013-14ல் ரூ..26,109 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத்தொழில் துறை பொருட்களின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23ல் 268 சதவீதமாக அதிகரித்து ரூ.95,957 கோடியாக பதிவானது.காதி மற்றும் கிராம தொழில்துறை பொருட்களின் விற்பனையில் மிகப்பெரிய ஏற்றம் 2013-14ம் நிதியாண்டில் ரூ. 31,154 கோடியாக இருந்த விற்பனை, முன் எப்போ தும் இல்லாத வகையில் 332 சதவீதம் அதிகரித்து 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,34,630 கோடியாக அதிகரித்தது.

    காதி துணிகளின் உற்பத்தியில் 2013-14ல்ரூ.811 கோடியாக இருந்த காதி ஆடைகளின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23ல் 260 சதவீதம் அதிகரித்து ரூ. 2916 கோடியை எட்டியது. காதி துணிகளின் விற்பனையில் நிதியாண்டு 2013 -14ல் ரூ. 1081 கோடியாக இருந்த இவற்றின் விற்பனை, நிதியாண்டு 2022-23ல் 450 சதவீதம் உயர்ந்து ரூ. 5943 கோடியை பதிவு செய்தது. ஊரகப்பகுதிகளில் அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் பிரதான நோக்கம்.

    இந்தத் துறைகளிலும் ஆணையம் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சாதனையை படைக்க தவறவில்லை. நிதியாண்டு 2013-14ல் 130,38,444ஆக இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பு நிதியாண்டு 2022-23ல் 36 சதவீதம் அதிக ரித்து 177, 16,288 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது. அதேபோல நிதியாண்டு 2013-1 4 ல் 5,62,521 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், நிதியாண்டு 2022-23ல் இந்த எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்து 9,54,899 ஆக இருந்தது.

    காதி கைவினைக்கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியாண்டு 2013-14 முதல் அவர்களது ஊதியம் சுமார் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல் காதி கைவினைக் கலைஞர்களின் ஊதியம்மேலும் 33 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.பிரதமரின்கோரிக்கையை ஏற்று காதி ஆர்வலர்கள் ஒரே நாளில் ரூ. 1.34 கோடி மதிப்பிலான பொருட்களை வாங்கியது மிகப்பெரிய சாதனை.

    பிரதமர்நரேந்திரமோடியின் சுதேசி திட்டத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தி பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் புதிய சாதனையை படைத்துள்ளது. வேலைதேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராக மாறுதல் என்ற பிரதமரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றுகிறது. இந்த நிதியாண்டில் 8.69 லட்சம் புதிய திட்டங்கள்உருவாக்கப்பட்டு அதன் மூலம் மொத்தம் 73.67 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 கிராமத்தொழில்கள்மேம்பாட்டு திட்டத்தில் தேன் இயக்கம் திட்டத்தின் கீழ் 19118 பயனாளிகளுக்கு 1,89,989 லட்சம் தேனீ வளர்ப்பு உப கரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 'குயவர் மேம்பாட்டுத்திட்டத்தின்' வாயிலாக இதுவரை சுமார் 25,000 குயவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் நவீன 

    • காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
    • 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் முயற்சியால், காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது'' என மத்திய காதி கிராம தொழில் ஆணைய தலைவர் தெரிவித்தார். மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காதி கிராம தொழில் ஆணையம் சார்பில், மாநில அளவிலான காதி நிறுவனங்களின் விற்பனை கண்காட்சி திருப்பூரில் நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    காதி கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ்குமார் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மேலும், பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற்ற புதிய தொழில் முனைவோருக்கு மானிய தொகை விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆணையத்தின் மாநில இயக்குநர் சுரேஷ் வரவேற்றார். தென் மண்டல துணை முதன்மை நிர்வாக அலுவலர் பாண்டே, திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மதுரை மண்டல இயக்குநர் அசோகன், திருப்பூர் சர்வோதய சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் பேசியதாவது:- பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் பெரும் முன்னேற்றம் பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாய் விற்பனை இலக்கு எட்டியுள்ளது. கிராம தொழில் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி தொழிலுக்கு 50 லட்சம் ரூபாய்; சேவை தொழிலுக்கு 20 லட்சம் ரூபாய் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 1,432 பேருக்கு 51.42 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவதற்குப் பதிலாக வேலை வழங்குவோராக மாற வேண்டும் என்ற பிரதமரின் பேச்சு அனைவருக்கும் ஊக்க மளிப்பதாக உள்ளது. அவ்வகையில் கிராம தொழில்கள் இன்று பெருமளவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தேனீ வளர்ப்போர் 11,750 பேருக்கு 1.75 லட்சம் தேனீப் பெட்டி; மண் பாண்ட உற்பத்தியாளர் 24,410 பேருக்கு பேட்டரி சக்கரம்; 3,316 ேபருக்கு தோல் பொருள் உற்பத்தி பயிற்சியும், 700 பேருக்கு கருவிகளும், 1,560 பேருக்கு அகர்பத்தி உற்பத்தி கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    காதி மற்றும் கைவினை பொருள் உற்பத்தியாளர் வருவாய் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்தி இன்று உள்நாட்டு அளவிலான உற்பத்தியாக மாறியுள்ளது. உலக அளவில் இதன் விற்பனையை கொண்டு செல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×