search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central minister"

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு ஏற்கப்பட்ட மிகப்பிரமாதமான பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தரப்பில் பியூஸ் கோயல் அறிவித்தார். நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்வதற்கு பணமில்லாத நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்று கட்டமாக இந்த தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

    பட்ஜெட் தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் கூச்சல் போட்டது. ஆனால் மக்கள் நல திட்டங்களை அறிவிக்கும் போது, பார்த்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பாமர ஏழை மக்களுக்கு அறிவிக்கப்படும் நலத்திட்டங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

    அவர்கள் தேர்தல் கண்ணோட்டத்தோடு இதை பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அனைத்து தரப்பு மக்களும் திருப்திகரமாக வரவேற்க கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

    130 கோடி மக்கள் ஏற்றுக்கொண்ட பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கட்சி இதுவரை தாக்கல் செய்துள்ள 10 பட்ஜெட்டிலும் ஏதாவது நல்ல திட்டத்தை அறிவித்தார்களா? அதிலும் தி.மு.க. அங்கம் வகிக்கக்கூடிய அரசு என்ற முறையில் எதையாவது அறிவித்தார்களா?

    தமிழகத்தில் வரும் தேர்தலில் பலம் பொருத்திய கூட்டணியாக பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி திகழும். 2014 தேர்தலில் தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணி பெற்றது. தற்போது பா.ஜ.க. அங்கம் வகிக்கக் கூடிய கூட்டணி முதல் நிலையை அடையும் கூட்டணியாக இருக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொன்னதை நடைமுறைப்படுத்தும் அரசு. வரும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க., கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP

    கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #KodanadEstate

    பழனி:

    பழனியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை கைப்பற்றுவோம். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.

    சமீப காலமாகவே மக்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட கால தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதற்கு எல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என்று செயல்படும் சில தீய சக்திகள்தான் காரணம்.

    தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உரிய வசதிகள் செய்து கொடுத்து அவர் நேர்மையாக செயல்பட அதிகாரங்கள் வழங்க வேண்டும்.

    பிரதமர் மோடி குறித்து கெஜிரிவால் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குறியது. ஒரு மாநிலத்தில் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத அரவிந்த்கெஜிரிவால் ஒரு நாட்டையே வழிநடத்தி செல்லும் பிரதமரையே தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார். வரும் தேர்தலோடு அவர் காணாமல் போய்விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #KodanadEstate

    தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மரங்களை அகற்ற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #gajacyclone

    சென்னை:

    தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் பொன்.ராதா­கிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், மாநில பா.ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், வேதரத்தினம் ஆகியோர் டெல்லியில் மத்திய விவசாய மந்திரி ராதாமோகனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது புயல் சேதங்கள் மற்றும் அந்த பகுதியின் தற்போதைய நிலைமை, என்னென்ன வகைகளில் அந்த பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவுவது என்று விவாதித்தனர். இன்று சென்னை திரும்பிய வானதி சீனிவாசன் இதுபற்றி கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிலவும் கள நிலவரங்களை மத்திய மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதையடுத்து மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க ஒத்துக் கொண்டார்.

    மத்திய அரசின் தென்னை வாரியம் மூலம் தென்னங்கன்றுகள் வழங்க சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி மந்திரியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

    குறுகிய கால பயிர், ஊடுபயிர் திட்டத்தின் மூலம் பயிர் வளர்ச்சிக்காக அந்த பகுதிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    தென்னை மரம் வளர்ந்து பலன் கொடுக்கும் காலம் வரை விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றியும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    தமிழக அரசு கொடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசு சில விளக்கங்கள் கேட்டுள்ளது. அது கிடைத்ததும் நிவாரண நிதி வழங்குவார்கள்

    மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு. தமிழக வேளாண் அமைச்சர், வீட்டு வசதி அமைச்சர், கிராம மேம்பாட்டுத்துறை என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் டெல்லி சென்று துறை மந்திரிகளை சந்தித்து ஒவ்வொரு துறையிலும் தேவையான திட்டங்களை பெறுவதற்கு முயற்சிக்கலாம். இங்குள்ள நடைமுறை சிக்கலை எடுத்து சொல்லி அதற்கு ஏற்றவாறு முயற்சிகள் மேற்கொண்டால் ஏதுவாக இருக்கும்.

    என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் பாராமுகமாக இருப்பதாக கூறினால் எப்படி? மத்திய அரசு பார்த்து கொண்டு தான் இருக்கிறது. கேட்பதை செய்வதற்கு காத்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone 

    மோடி அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார். #RamdasAthawale
    மும்பை:

    இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே இன்று இங்கு வந்திருந்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்வைத்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்ட்ட அவர் பா.ஜ.க.வுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியர்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.



    வெகு விரைவாக குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என நம்புகிறேன் என இன்றைய பேட்டியின்போது ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார்.

    இதே மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராம்தாஸ் அத்வாலேவை பிரவீன் கோசுவாமி என்பவர் கன்னத்தில் அறைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #15lakh #15lakhinbankaccounts #RamdasAthawale
    கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தத்தை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் இன்று பேரணி நடத்தினர். #MekedatuDam

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணிக்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

    இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் மற்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் பெண்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்தும், இதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடக அரசை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் ஏந்திய படி சென்றனர்.

    காவிரி படுகையை பாலை வனமாக்ககூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களை கைவிட கோரியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

    பிறகு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    விவசாயிகளின் இந்த பேரணியையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    5 மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் நாங்கள் 4 மாநிலங்களில் வெற்றி பெறுவோம். ராஜஸ்தானில் நான் பெரும்பாலான இடங்களில் பிரசாரம் செய்தேன். அங்கு பா.ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால்தான் மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகானும், சத்தீஷ்கரில் ராமன்சிங்கும் தொடர்ந்து ஆட்சி அமைப்பார்கள். 4-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதனை படைப்போம்.

    வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான மனநிலையில் உள்ளனர். நாட்டின் புகழ்பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP

    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் காங்கிரசுடன் தி.மு.க. மீண்டும் கூட்டணி சேருவது கருணாநிதியின் வார்த்தைப்படி கூடா நட்பு ஒன்று கூடுகிறது. இந்த கூட்டணியால் மீண்டும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியையும் அமைக்க துடிக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் 2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.

    இலங்கை அரசால் தமிழர்களை ஒரு காலத்திலும் வெல்ல முடியாது. தமிழர்களை வெல்வதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு துணை நின்றதாக ராஜபக்சே ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது அவர் இலங்கை பிரதமராகவும் ஆகி இருக்கிறார்.

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்பது மீண்டும் 2009-ஐ நோக்கி செல்வதற்கு சமம். அந்த நிலைமை மீண்டும் உருவாவதற்கு இடம் கொடுக்க கூடாது என்பது எனது வேண்டுகோள்.


    தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் 1972-ல் அ.தி.மு.க. உருவெடுத்ததும், அதேபோல் ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் உருவானதும்.

    இப்போதைய அரசியல் சூழலில் கழகங்கள் இல்லாத தமிழகத்தை காண மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வலுவான கூட்டணி அமைய வேண்டும். வருகிற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்கு பா.ஜனதா முயற்சிக்கும். அதே நேரத்தில் கூட்டணிக்காக பா.ஜனதா யாரிடமும் கெஞ்சாது.

    தம்பித்துரை, பா.ஜனதாவை ஏன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்று தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடக் கூடாது. தம்பித் துரை, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதற்கு பின்புலம் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    கமல் கட்சி தொடங்கி இருக்கிறார். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. முதலில் கட்சியை தொடங்கி அரசியல் களத்துக்குள் வரட்டும். மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்ப்போம். இப்போதே அவர்கள் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கி வைக்கும் வன்கொடுமைக்கு முடிவு கட்டும் விதமாக கொண்டுவரப்பட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. #PPChaudhary #LokSabha
    புதுடெல்லி:

    தொழுநோயால் பாதிக்கப்படவர்களை அவர்களது உறவினர்கள் உட்பட ஏறத்தாழ அனைவருமே ஒதுக்கி வைக்கும் ஒரு சூழல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இதுபோன்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க கூடாது என தெரிவித்திருந்தது.

    அதேபோல், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சீர்செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.



    இந்நிலையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்டமசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய சட்டத்துறை மந்திரி பி.பி சவுத்ரி தாக்கல் செய்த இந்த மசோதாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநிலங்களவை மனு சீராய்வுக்குழு, தேசிய சட்ட ஆணையம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில், தனிநபர் சட்டத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரிவை நீக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabha
    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் கூறினார். #ChennaiSalemGreenExpressway
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று பேசினார்.

    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா?, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதன் விவரம் என்ன? இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.




    இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் பதில் அளித்து பேசினார்.

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவை அனைத்துமே காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தலுக்கு எதிரானதுதான். திட்டத்துக்கு எதிரானது அல்ல.

    விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை எந்த தகவலும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை அமைக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார்.  #ChennaiSalemGreenExpressway

    தமிழக மக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய ரெயில்வே இணையதளத்தில் தமிழையும் சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு, ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலாளர் எட்வர்டு ஜெனி ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே புதிய இணையதள சேவையின் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. வேறு பிராந்திய மொழிகள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இதனால் இந்தி மொழி தெரியாத தமிழக மக்களும், பிற பிராந்திய மொழி மக்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

    எனவே ரெயில்வே முன்பதிவு இணையதள சேவையில் தமிழையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    புதுடெல்லி:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக இத்தாலி சென்றடையும் சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி என்ஸோ மோவேரோ மிலான்சேய் ஆகியோரை சந்தித்து இந்தியா - இத்தாலி இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    19-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்லும் அவர், பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜேன் எய்வெஸ் லி டிரியான் மற்றும் உயரதிகாரிகளை சந்திக்கிறார்.

    20-ம் தேதி லக்சம்பர்க் நாட்டுக்கு சென்று அந்நாட்டின் மன்னர் ஹென்றி ஆல்பர்ட் கேப்ரியல் பெலிக்ஸ் மேரி குய்ல்லாவ்மே மற்றும் பிரதமர் ஜேவியர் பெட்டெல் ஆகியோரை சந்திக்கிறார்.

    பயணத்தின் இறுதிக்கட்டமாக பெல்ஜியம் நாட்டுக்கு செல்லும் அவர் 23-ம் தேதிவரை அங்கு தங்குகிறார். ப்ருசெல்ஸ் நகரில் பெல்ஜியம் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான டிடியெர் ரெய்ண்டெர்ஸ் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் அண்டோனியோ டஜானி ஆகியோரை சந்தித்து ஐரோப்ப்பிய யூனியன் - இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் சுஷ்மா அங்கு நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் தலைமையேற்பதுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #Europeannations #Europeannationstrip
    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரெயிலை மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்.
    கோவை:

    கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இரட்டை அடுக்கு ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் தொடக்க விழா கோவை ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் நடந்தது. மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹெயின் கலந்துகொண்டு கொடியசைத்து இரட்டை அடுக்கு ரெயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடக்க நாளான நேற்று மட்டும் இந்த ரெயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயிலில் வை-பை வசதி, ஜி.பி.எஸ்.கருவி, பயோடாய்லெட் வசதி, சூரிய ஒளியை திருப்பி அனுப்பக்கூடிய மேற்கூரை, பயணிகள் குறித்த தகவலை தெரிவிக்கும் எல்.இ.டி. திரைகள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

    மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 8 பெட்டிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். இதில் 3 பெட்டிகளில் உணவு சாப்பிடும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 912 பேர் பயணம் செய்யலாம். வாரந்தோறும் திங்கட்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு (வண்டி எண் 22666) பிற்பகல் 12.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 22665) இரவு 9 மணிக்கு கோவை வந்து சேரும். பயண கட்டணம் ரூ.610 ஆகும்.

    தொடக்க நாளான நேற்று இந்த ரெயிலில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாகவும், நாட்கள் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து விடும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×