search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bcci"

    • டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.
    • இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    மும்பை:

    2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஒவ்வோரு ஐபிஎல் தொடரின் போதும் புதுப்புது விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது. அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு "ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்" என பிசிசிஐ பெயரிட்டுள்ளது.

    கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு நடுவர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி நடுவரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள்.

    டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. அந்தவகையில் இதுவரை டிவி நடுவருக்கும் ஹாக்ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையில் ஒரு வழித்தடமாக இருந்த டிவி ஒளிபரப்பு இயக்குனர், இனி புதிய முறையின் கீழ் ஈடுபடமாட்டார்.

    அதன்படி டிவி நடுவர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். நடுவர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள். இதில் இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் எட்டு அதிவேக கேமராக்களை மைதானத்தில் பொருத்தி போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.

    டிவி நடுவர்கள் கேட்கும் போது அந்த எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும். அதன் மூலம் டிவி நடுவர் இனி விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும். அதே போல, எல்பிடபுள்யூ-வின் போதும் வழக்கமாக அவுட்சைடு லெக் திசையில் பந்து பிட்ச் ஆகி இருந்தால் அதை முன்கூட்டியே ஹாக்ஐ நிறுவன வல்லுநர் கூறி விடுவார்.

    இதன் மூலம், டிவி நடுவர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபுள்யூவை மறுக்க முடியும். அதன் மூலம் அதிக நேரம் ஆவதை தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    • ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
    • தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. வரும் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியானது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.
    • ரஞ்சி கோப்பையின் நான்கு, ஐந்தாம் நாள் போட்டிகளில் களமிறங்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், இவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    எனினும் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தனர். இதன் காரணமாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் ரஞ்சி கோப்பையில் விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் பெயரை மீண்டும் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கலாமா என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதவிர ஸ்ரேயஸ் அய்யருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளை விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்றும் கூறப்பட்டது. முதுகு வலி காரணமாக ரஞ்சி கோப்பையின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை.

    இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்ரேயஸ் அய்யர் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக துவக்கத்தில் இருந்தே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ம் தேதி எதிர்கொள்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022-ம் ஆண்டு கார் விபத்திற்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
    • ஐபிஎல் 2024 சீசனில் பேட்டிங் மட்டும் செய்வார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்திருந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.

    கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஐபிஎல் சீசன் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

    விபத்து மூலம் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் விளையாட்டு போட்டிக்கு திரும்புவதற்கான உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்று வந்தார்.

    இதனால் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவார் என அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தது. பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று, ரிஷப் பண்ட் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் டி20 உலகக் கோப்பைப்கான இந்திய அணியில் இடம்பெற பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 14 மாதங்கள் உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐயின் மருத்துவக்குழு அறிவித்துள்ளது.

    அதேவேளையில் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றம் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 2024 ஐபிஎல் சீசனில் விளையாடமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    • கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
    • செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார்

    அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார் என தெரிவித்தார்.

    வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை.
    • நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம்.

    தர்மசாலா:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப் பட்டனர். இருவரும் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்ததால் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்தது.

    கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த விவகாரம குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய் திறந்துள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தை நான் முடிவு செய்யவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர்)எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வு குழுவினர்களின் கவனத்தை பெறவேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவினரும் தான் எடுப்பார்கள். இதற்கான அளவுகோல் என்ன என்பது கூட எனக்கு தெரியாது.

    நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். ஒரு வீரருக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பதை நாங்கள் ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • இந்த ஊக்கத்தொகை 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இதில் 'டாஸ்' வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டு, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் 259 ரன்கள் இந்திய அணி கூடுதலாக சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
    • பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார்.

    சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அவருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    கடந்த டிசம்பரில், சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ₹ 1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இன்னமும் இந்திய அணியில் உரிய இடம் கிடைக்க சஞ்சு சாம்சன் போராடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டார்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து 25 வயதான இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் நீக்கப்பட்டார். பிசிசிஐ-யின் கோரிக்கையை மீறி உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

    தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை என்றாலும் இந்த நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி போட்டிகள்) பங்கேற்ற விளையாடுங்கள் என பிசிசிஐ இஷான் கிஷனிடம் கேட்டுக் கொண்டது. மேலும் ரஞ்சி போட்டியில் விளையாடி பார்மை நிரூபித்த பின்னரே மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

    ஆனால் அப்படி பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது பிசிசிஐ லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து விளையாடியுள்ளார். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    அதாவது சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக பயன்படுத்தும் உபகரங்களை சாதாரண உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் அந்த சின்னங்களை டேப் கொண்டு மறைத்த விட்ட பின்னரே அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

    ஆனால் அதையும் கவனிக்காத இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யின் லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மட்டை உள்ளூர் போட்டியில் பயன்படுத்தியதால் மேலும் ஒரு பஞ்சாயத்தில் அவர் சிக்கியுள்ளார். அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன்.

    2023 -24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

    இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் விளையாட வேண்டும். அது நாட்டுக்கு நல்லது. நாட்டிற்கு எது நல்லதோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள். ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது.

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும். இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    2023- 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியீட்டது. இதில் 2 முக்கிய வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ புறகணித்துள்ளது.

    கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். கிரேடு ஏ பிரிவில் தமிழக வீரர் அஸ்வின், சமி, சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளனர்.

    கூடுதலாக, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டின் பிளேயிங் 11-ல் இடம்பெற்றால், கிரேடு 'சி'-ல் சேர்க்கப்படுவார்கள்.

    ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

    அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.

    இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    கிரேடு ஏ+ (ரூ. 7 கோடி)

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா

    கிரேடு ஏ (ரூ.5 கோடி)

    அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா

    கிரேடு பி (ரூ. 3 கோடி)

    சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால்

    கிரேடு சி (ரூ.1 கோடி)

    ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகுர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.

    • அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
    • இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்டில் வென்று அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தியாவிடம் தோற்றதில் இங்கிலாந்து அணிக்கு அவமானம் இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெற்ற விதத்துக்கு இந்திய அணியை பாராட்டுகிறேன். அதற்கு தகுதியான அணியாகும். விராட்கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா (ஒரு போட்டியில் ஆட வில்லை) ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டு இருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

    திறமை மட்டுமில்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. இந்த தொடரில் இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

    அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். 2-வது இன்னிங்சில் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித்சர்மா அவரிடம் புதிய பந்தை கொடுத்தபோது கண்களில் நெருப்பு தெரிந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டார்.

    துருவ் ஜூரல்-குல்தீப் யாதவ் ஜோடி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் திருப்பு முனையாகும். சுப்மன்கில் தனது திறமையான ஆட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தினார். ஜூரல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் நன்றாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    ×