search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷ்ரேயாஸ் அய்யர்"

    • பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன.
    • கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் சாதனை வெற்றியை பெற்றது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன் என்ற இமாலய இலக்கு இருந்தது.

    சுனில் நரைன் 56 பந்தில் 109 ரன்னும் (13 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 18 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். அவேஷ்கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டும், போல்ட், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்தில் 107 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரியான் பராக் 14 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), போவெல் 13 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்சித் ரானா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    224 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது. 2020-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன் இலக்கை எட்டி பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது.

    ராஜஸ்தான் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    பட்லர் ஒரு சிறப்பான வீரர். அவர் களத்தில் இருக்கும் போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    6-வது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

    இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.

    ஜோஸ் பட்லர் கடந்த 6-7 ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார். தொடக்க வீரரான அவர் 20 ஓவர் வரை பேட்டிங் செய்தால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார். டக் அவுட்டும் ஆவார். கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. 223 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் தோற்றதால் அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கசப்பான மாத்திரை போல் இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன. இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

    இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான முறையில் தான் பந்து வீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

    நல்ல வேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டு வருவது முக்கியம்.

    சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

    இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை.
    • நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம்.

    தர்மசாலா:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப் பட்டனர். இருவரும் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்ததால் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்தது.

    கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த விவகாரம குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய் திறந்துள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தை நான் முடிவு செய்யவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர்)எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வு குழுவினர்களின் கவனத்தை பெறவேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவினரும் தான் எடுப்பார்கள். இதற்கான அளவுகோல் என்ன என்பது கூட எனக்கு தெரியாது.

    நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். ஒரு வீரருக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பதை நாங்கள் ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய அணியில் ரன் குவிக்க திணறியதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்தல்.
    • காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் அறிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பிசிசிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துவது உண்டு.

    அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்கள் அடிக்க முடியாமல் ஃபார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு.

    ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஷ்ரேயாஸ் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை- தமிழ் நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரஞ்சி டிராபி காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மும்பை- பரோடா இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா- மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலிறுதியில் மத்திய பிரதேசம் ஆந்திராவை வீழ்த்தியிருந்தது. கர்நாடகாவை விதர்பா வீழ்த்தியிருந்தது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது.

    ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஜோடி இந்திய அணி வெற்றிக்கு எந்த நிலையிலும் பாதகமாக இருக்கும் என்ற இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க முயன்ற போது தனது விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார். ரன்களுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டிய ஸ்டோக்ஸ் சற்றே வேகம் குறைவாக ஓடியது, அவர் பெவிலியன் திரும்ப காரணமாக அமைந்தது.

     


    இதைத் தொடர்ந்து தனது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கையை இன்று ஷ்ரேயாஸ் அய்யர் அப்படியே செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எடுக்க முயன்ற போது வேகமாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வேகமாக ஸ்டம்ப்களை நோக்கி வீசினார்.

    இவர் வீசிய பந்து ஸ்டம்ப்களை பதம் பார்க்க, பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தான் ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் போன்றே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். 

    • இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை.
    • ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கான் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் இந்த தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள். 

    இதில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாக சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர்கள் மீது நன்னடத்தை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

     

    இந்நிலையில் இவர்கள் இருவரும் மீது நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இடைவெளி கேட்ட அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே தற்போது அவர் விளையாடுவதற்கு தயாராக இல்லை.

    இடைவெளி முடிந்ததும் அவர் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இதன் பின்னணியில் சுமாரான நன்னடத்தை உட்பட எந்த காரணமும் இல்லை.

    இவ்வாறு டிராவிட் கூறினார். 

    • முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் இன்று விளையாடமாட்டார்.
    • ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), ஆவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். டோனி டி ஜோர்ஜி, பெலுக்வாயோ, கேப்டன் மார்க்கிராம் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்கிராம் ஒப்புக் கொண்டார். அவர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவார்கள்.

    கடந்த முறை (2022) தென்ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையில் முழுமையாக (0-3) தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் வகையில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.

    இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.

    23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் 530 ரன்கள் அடித்துள்ளார்.
    • அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள். 530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "Iyer" ஹேஷ்டேக் டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    • அரையிறுதியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
    • இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன. நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.

    இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன். அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    • நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா.
    • பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள்.

    மும்பை:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அசத்தினாலும் ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் பின்வருமாறு;-

    ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.

    ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்

    என்று கூறியுள்ளார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மேலும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடவில்லை. 4-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி காரணமாக அவர் களம் இறங்கவில்லை. இதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகி உள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதுகில் ஏற்பட்ட காயத்தால் நான் நீண்ட நாட்கள் அவதிப்பட்டேன். இதன் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்கள் என்னால் இடம்பெற முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

    ஆனால் அவர் அணியில் இடம்பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.

    முதுகு வலியினால் அணியில் இடம்பெறாமல் இருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீரர் உலக கோப்பைக்கு தேர்வு செய்வார் என்று நம்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளார்.
    • இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்கவில்லை.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்க வரவேயில்லை.

    முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், 4-வது நாள் ஆட்டத்திலும், 5-வது நாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், தற்போது தொடர் முடிந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், வரும் 17-ம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    இதுவரையில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக யாரும் அறிவிக்கப்படாத நிலையில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    ×