search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து தொடர்"

    • கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • இங்கிலாந்து எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த 4 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் தொடரை (4-1) வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது.

    இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பல கருத்துக்கள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த மோதலில் இதுதான் நடந்தது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன்.

    மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700-வது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தோம்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

    இதனை தொடர்ந்து கில்லுடன் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டசனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். அதற்கு அதனால் என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். அத்துடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    • ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
    • சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.

    இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.

    ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.

    ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.

    அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.
    • இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

    மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பலமுறை அவர்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தனர். இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.

    மேலும் 5 போட்டிகளில் அவர்கள் 3 முறை டாஸ் வென்றனர். எனவே ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது? என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார்? என்பதை யோசியுங்கள்.

    அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். ஓலி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை. எனவே உங்களுடைய இந்த ஆட்டத்தை பார்த்து அதில் முன்னேறும் வழியை பாருங்கள். அந்த வகையில் தான் ஒரு வீரராகவும் அணியாகவும் உங்களால் முன்னேற முடியும்.

    இவ்வாறு நாசர் ஹூசைன் கூறினார்.

    • டெஸ்ட் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (117 புள்ளி), 3வது இடத்தில் இங்கிலாந்தும் (111 புள்ளி) உள்ளன.

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியதன் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட்டுகளின் ஐ.சி.சி தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி பிடித்து அசத்தியுள்ளது.

    இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் (121 புள்ளி) மற்றும் டி20 கிரிக்கெட் (266 புள்ளி) தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது.

    என அமீர் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
    • 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

    நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.

    இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார். 

    • டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
    • கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.

    பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
    • சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஜெய்ஸ்வாலும் அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய்ஷா வழங்கினார். இதனையடுத்து கோப்பையை இளம் வீரர்களிடம் கொடுத்து அணி வீரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

    இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இதில் பட்டிதார் தவிர மற்ற வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

    மேலும் இந்த தொடரில் இளம் வீரர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா கிண்டலாக சில விஷயங்களை செய்துள்ளார். குறிப்பாக இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோரை பீல்டிங் நிற்க ரோகித் கூறியது டிரெண்டானது.

    மேலும் சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்து விட்டு ரிவ்யூ கேட்குமாறு கூறினார். ஆனால் ரோகித் அதை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவார். ரீப்ளேவில் அது அவுட் என வந்தது. இதனை பார்த்த ரோகித், சர்ப்ராஸ் கானை கிண்டலாக சைகை காட்டுவார்.

    மேலும் பீல்டிங்கின் போது ஹெல்மேட் அணியாமல் சர்ப்ராஸ் கான் நிற்பார். ஓவரின் கடைசி பந்து தான். அதனால் நின்று கொள்கிறேன் என அவர் கூறுவார். உடனே ரோகித் நீ இங்க ஹீரோவா இருக்க வேண்டாம். உடனே ஹெல்மெட் அணிந்து வா என கூறுவார். இது தொடர்பான வீடியோவும் டிரெண்டானது.

    இப்படி இளம் வீரர்களுடன் அக்கரையுடனும் ஜாலியாகவும் விளையாடிய ரோகித் சர்மாவுடன் இளம் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ரோகித் தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கடுத்த 3 போட்டிகளில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று 3- 1 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து குல்தீப் யாதவ், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் 2, பும்ரா 1, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    இதனால் 4- 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வென்றது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்துள்ளது.

    இதற்கு முன் உலக அளவில் 1897/98, 1901/02 ஆகிய வருடங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் (2 முறை) 1911/12இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து மட்டுமே முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்த வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி படைத்துள்ளது.

    • கும்ப்ளே சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
    • அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    அதன்பின் களமிறங்கிய இந்தியா, முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அஸ்வின் 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலும் மற்றும் தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

    இதன்மூலம் 100-வது டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான்கள் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார். 2006-ம் ஆண்டு முத்தையா முரளிதரன் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பிறகு அஸ்வின் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    100வது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

    அஸ்வின்இந்தியா 2024 இங்கிலாந்து 9/128 5/77

    முத்தையா முரளிதரன் இலங்கை 2006 பங்களாதேஷ் 9/141 6/54

    ஷேன் வார்ன் ஆஸ்திரேலியா 2002 தென்னாப்பிரிக்கா 8/231 6/161

    அனில் கும்ப்ளே இந்தியா 2005 இலங்கை 7/176 5/89

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • இந்த ஊக்கத்தொகை 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இதில் 'டாஸ்' வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டு, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் 259 ரன்கள் இந்திய அணி கூடுதலாக சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473 ரன்களை எடுத்துள்ளது.
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    தரம்சாலா:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

    ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில்லும் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதமடித்தனர். சர்ப்ராஸ் கான் 56 ரன்னும், படிக்கல் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஜடேஜா, துருவ் ஜுரல் தலா 15 ரன்னும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

    ×