search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranji Cricket"

    • முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன்.

    2023 -24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

    இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் விளையாட வேண்டும். அது நாட்டுக்கு நல்லது. நாட்டிற்கு எது நல்லதோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள். ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது.

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும். இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    • மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இந்தூர்:

    89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திரா மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் இந்தூரில் கடந்த 23ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 234 ரன்னும், ஆந்திரா 172 ரன்னும் எடுத்தன.

    62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 107 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திரா 3வது நாள் முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து இருந்தது. ஹனுமா விஹாரி 43 ரன்களுடனும், கரண் ஷிண்டே 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 69.2 ஓவர்களில் ஆந்திரா 165 ரன்னில் சரண் அடைந்தது. இதனால் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 55 ரன்கள் சேர்த்தார். மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பையில் நடைபெறும் பரோடாவுக்கு எதிரான கால்இறுதியில் முதல் இன்னிங்சில் மும்பை 384 ரன்னும், பரோடா 348 ரன்னும் எடுத்தன. 36 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மும்பை 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்து மொத்தம் 415 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர் ஹர்திக் தமோர் 114 ரன்னும், பிரித்வி ஷா 87 ரன்னும், ஷம்ஸ் முலானி 54 ரன்னும் எடுத்தனர். தனுஷ் கோடியன் 32 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பரோடா சுழற்பந்து வீச்சாளர் பார்கவ் பாத் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    நாக்பூரில் நடைபெறும் விதர்பாகர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விதர்பா 460 ரன்னும், கர்நாடகா 286 ரன்னும் எடுத்தன. 174 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 196 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் வேகப்பது வீச்சாளர்கள் வித்வாத் கவீரப்பா 6 விக்கெட்டும், வைசாக் விஜய்குமார் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ரவிகுமார் சமார்த் 40 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் மயங்க் அகர்வால் (61 ரன்), அனீஷ் (1 ரன்) களத்தில் உள்ளனர். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 268 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.

    இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி வீரர் கம்பீர் சதம் அடித்தார். #RanjiTrophy #Gambhir
    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நடந்து வரும் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 3-வது நாள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து 19 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவுதம் கம்பீர் 185 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் கம்பீர் முதல் தர போட்டியில் பதிவு செய்த 43-வது சதம் இதுவாகும்.

    இந்தூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரோஹேரா 267 ரன்கள் (21 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 21 வயதான அஜய் ரோஹேரா படைத்தார். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டில் மும்பை வீரர் அமோல் முஜூம்தார் 260 ரன்கள் எடுத்ததே முதல் தர போட்டியில் அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. ரோஹேராவின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியுடன் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் வெற்றியை வசப்படுத்தியது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ( பிரிவு) கேரள அணி முதல் இன்னிங்சில் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பாபா இந்திரஜித் (92 ரன்), கவுசிக் காந்தி (59 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. #RanjiTrophy #Gambhir
    ×