search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது சமி"

    • கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
    • செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார்

    அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார் என தெரிவித்தார்.

    வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
    • விரைவில் சொந்த காலில் நிற்க ஆசை என முகமது சமி தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சரியாக சில நாட்கள் ஆகும். விரைவில் சொந்த காலில் நிற்க ஆசைபடுவடுவதாகவும் சமி தெரிவித்தார்.

    இதனால் அவர் ஐபிஎல் தொடரை இலக்க நேரிடும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது சமி சாதனை படைத்தார். 

    • ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்கால் காயம் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

     

    இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது சமி விலகினார்.
    • முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அவர் இந்த தொடரில் இல்லாதது வருத்தமான விஷயம் தான்.

    இந்நிலையில் முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமி கூறியது, இது மிகவும் கடினமான கேள்வி. சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது என்றால் மற்றவருடன் ஒப்பிடுவது போல இருக்கும். அது தவறாக மாறிவிடும். உலகில் வெற்றிகரனமான கேப்டன் யார் என்று கேட்டால் அது டோனி என்று சொல்லுவேன். அவரை போல யாரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்று சமி கூறினார்.

     

    டோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர்.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

    முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

    இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது தகவல் வெளியாகி உள்ளது.

    • கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன்.
    • எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.

    இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இது குறித்து முகமது ஷமி கூறுகையில், 'கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் சமி இடம் பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும், மற்ற 3 போட்டிகளில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    • சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
    • முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.

    முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

    இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.

    ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.

    என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
    • முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நாளை தொடங்குகிறது

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது

    இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து தீபக் சாஹர் திடீரென விலகியுள்ளார். சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இதேபோல், டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட

    மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

    ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்

    • 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
    • டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இதையடுத்து 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.

    டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியைத் தவிர்த்து டெஸ்ட் தொடருக்கு செல்லும் எஞ்சிய வீரர்களுக்கு முகமது சமி செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    ரோகித் சர்மா தவிர்த்து மற்ற வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கின்றனர்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி (உடல்தகுதியைப் பொறுத்து), முகேஷ் குமார், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

    • உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்தது. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியனானது.

    இந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச்சென்றார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐசிசி வெளியிடப்பட்டது.
    • இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு மாதம் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் பெயர் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆவர்.

    நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். உலகக் கோப்பை தொடரில் முகமது சமி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர் என்ற விருதை தட்டிச் சென்றார். கடைசி போட்டியில் திராவிஸ் ஹெட் சதம் அடித்து அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் இந்த தொடரில் இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.

    உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ×