என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bank"
- ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
- கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்
டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
இதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அமரேசன், துணைத் தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வட்டி இல்லா கடன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- புதியமுத்தூரில் உள்ள வங்கியில் சித்ரா ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடி வந்தார்.
- இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு வெள்ளாரத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (வயது 55).
இவர் புதியமுத்தூரில் உள்ள வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பணத்தை கையில் இருந்த பையில் வைத்திருந்தார். பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்த போது தனது பையில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போய் இருந்தது.
இதனால் பதறிப்போன சித்ரா இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி யப்பன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.
ராசிபுரம்:
சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.
- கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
- கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.
இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?
கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?
என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.
- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கராசு, சிவானந்தம், செல்வகுமார், செல்வமேரி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பாபநாசம் பேரூராட்சி குப்பைமேட்டில் சமுதாயக்கூடம் கட்டவேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை கட்ட வேண்டும்.
வேம்பக்குடி கிராமத்திற்கு விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும், உர தட்டுப்பாட்டை நீக்க கோரியும் அனைத்து கிராமங்களிலும் வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் வட்டாட்சியர்
பூங்கொடி தலைமையிலும் போலீஸ் துணை சூப்பிரண்ட் பூரணி முன்னிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை அனைத்தும் சம்மந்தப்பட்டதுறைகள் மூலம் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு சுமூக தீர்வுகள் காணப்பட்டது.
இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர துணை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
- 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்
கரூர்:
11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வரும் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க, கரூர் மாவட்ட செயலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடக்க கூட்டுறவு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, வழங்க வேண்டிய ஓய்வு கால நிதி பயன்களை உடன டியாக வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பில் உள்ள செயலாளர்களை, அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பன 11 உள் அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சங்கம் சார்பில், வரும் 19ம் தேதி இதுகுறித்து, அவர் வெளி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நகைக்கடன் தள்ளுபடி செய்தது ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வில்லை.
- 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, நகைகளை திருப்பித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில், பயனாளிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வட்டா ட்சியர் த.சுகுமார் தலை மையில் செப்.22 ல், நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், செப். 28 ஆம் தேதிக்குள், நகை பயனாளிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்நிலையில் உறுதியளித்தபடி 28ம் தேதி பயனாளிகளுக்கு நகை திருப்பி வழங்கப்படாததைக் கண்டித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, கோ.ராமசாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்துகூட்டுற வுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன், பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை இரண்டு கட்டமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சமாதானப் பேச்சு வார்த்தையில், விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரசுத் தரப்பில், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, கள அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் சுகி.சுவாமிநாதன், இரண்டு நாளில் நகைகள் திருப்பித் தரப்படும்" என உறுதி அளித்தார்.
இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்