search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள்"

    • மர்ம ஆசாமிகள் வந்த காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலை பூங்குணம் ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்,போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.காரில் கட்டு கட்டாக பணம், நகை இருந்தது தெரியவந்தது. காரின் சாவியை போலீசார் எடுத்தனர். இதனால் ஆத்திரமடை ந்த காரில் வந்த 3 பேர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கத்தியால் போலீசாரை தாக்கமுயன்றனர்.அதிர்ஷ்டவசமாக அவர்களின் கொலை வெறி தாக்குதலில் இருந்து போலீசார் காயம் இன்றி தப்பினார். பின்னர் கண்ணிமை க்கும் நேரத்தில் காரில் இருந்த பணம் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.வாகன சோதனையில் இருந்தபோக்குவரத்துபோலீசாரை தாக்கம் முயன்றுகொலை மிரட்டல் விடுத்து 3 பேர் தப்பிய தகவல் அந்த பகுதியில்காட்டுத்தீ போல பரவியது.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுபழனி இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமர்ம ஆசாமிகள்வந்த காரை பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் . மேலும் கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சித்திரச்சாவடி, கணிசப்பாக்கம், வி.ஆண்டி குப்பம் வழியாக பண்ருட்டிக்கு ஓடி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போக்குவரத்து போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய ஓடிய மர்ம ஆசாமிகள் வந்த காருக்கு 4 நம்பர் பிளேட் இருந்தது. காரின் நம்பர் போலி எனவும், மர்ம நபர்கள் திருச்சி, திண்டுக்கல் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்னைக்கு செல்ல பண்ருட்டி வழியாக வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள் என தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 2 பெண் மற்றும் 3 ஆண்கள் சேர்ந்து தங்க நகைகளை திருடி சென்றது சம்பந்தமாக பண்ருட்டி நகர போலீஸ் நிலையதில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைய ர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பா ர்வையில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப்-இன்ஸ்பெ க்டர்க ள்தங்கவேல், பிரசன்னா ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சி.சி.டி.வி . காமிரா காட்சி மற்றும் சைபர் கிரைம் ஏட்டுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்சளை ம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைம லைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள்என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வேறொரு கொள்ளை வழக்கில் சிதம்பரத்தில் கைதாகிகடலூர் மத்திய சிறையில் இருந்தஇவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பண்ருட்டியில்வக்கீல் ஒரு வீட்டில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.தலைவ ராக உள்ளஇவர்க ளது கூட்டாளிஒருவனிடம் பணம் உள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்துடன் தலைமறை வாகியுள்ளகூட்டாளியை பொறிவைத்து தேடி வருகின்றனர்.

    • கொள்ளை போன அதே வீட்டில் மீண்டும் கைவரிசை
    • பெண் சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி புஷ்பலதா(வயது 45).

    சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு அயர்ந்து தூங்கினர். நள்ளிரவு 2.25 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கண் விழித்த புஷ்பலதா ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது பக்கத்து வீடுகளில் மின்சாரம் இருந்தது.

    இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் உள்ள மின்சார பெட்டியை பார்த்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்ப லதா திருடன்.... திருடன்.... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவ தற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    பின்னர் அவர் வெளியே வந்து பார்த்த போது முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கொள்ளையடிக்க வந்த வாலிபர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேஷ் என்பவரது வீட்டில் 2 செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    ஏற்கனவே புஷ்பலதா வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு இதே போல மர்மநபர்கள் 11 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். அந்த வழக்கில் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது 2 வாலிபர் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.

    இது குறித்து புஷ்பலதா அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் மின்சாரத்தை துண்டித்து கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடை பெற்றது.
    • சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையிலும், சாலையில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் தொடந்து நடைபெற்று வந்தது.

    இது தொடர்பான புகார்கள் மாவட்ட குற்றபிரிவு போலீசாருக்கு சென்றது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட அஞ்சார்வார்த்தலை பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவரும் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சை்கிகளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    அவர்களை தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராம்பாறை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வம் என்கிற முனியப்பிள்ளை என்பதும், இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் ரூ.10,000/- ரொக்கம் திருடிய சம்பவத்திலும், பெரம்பூர் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்ச ம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்களி டமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இவர்கள்மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்.
    • ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலின் உண்டியல் கடந்த 16-ந்தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து துப்பு கிடைக்காததால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர்.

    வாகையூர் அருகேயுள்ள ஆக்கனூர் கிராமத்தில் ஓடை உள்ளது. இதனை சுற்றியுள்ள நிலங்களில் களை எடுக்க பெண்கள் சென்றனர். அப்போது ஓடை அருகே உடைந்த நிலையில் ஒரு உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியல் மீது வாகையூர் செல்லியம்மன் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து வாகையூர் கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், உண்டியலை ஆக்கனூர் ஓடை அருகே வீசி சென்றிருக்கலாம் என கிராம பிரமுகர்கள் அனுமானித்தனர். இதையடுத்து ஓடையில் இருந்த உண்டியலை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாகன சோதனை

    நாமக்கல் எம்.மேட்டுப்பட்டி, நல்லிபா ளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.

    அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் டி.எஸ்.பி. தன்ராஜ் கூறுகையில், வடமாநில கொள்ளையர்களை கண்காணிக்க சோதனை சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலமும் தீவிர கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • பைக் வாங்குவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம்
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவில், குட்டைக்காடு வனசாஸ்தா கோவில் மற்றும் தென்னூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நாளில் கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது.

    இந்த தனிப்படையினர் கோவில் கொள்ளை யர்களை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை யர்கள் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சாமியார்மடம் நெடியாங்கோடு, மேல்விளை பகுதியை சேர்ந்த சபரி (வயது 22), புலிப்பனம் கல்நாட்டிவிளை பகுதியை சேர்ந்த சாமுவேல்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான சபரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    10-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் கட்டிட தொழில் செய்து வந்தேன். அப்போது கருங்கல் பகுதியை சேர்ந்த ஜெனிஷா என்பவருடன் இன்ஸ்டா கிராமில் பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தேன். என் மீது மார்த்தாண்டம், திரு வட்டார், தக்கலை ஆகிய போலீஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனம் திருட்டு, கஞ்சா கடத்தல் ஆகிய வழக்குகளும் உள்ளன.

    கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சாமியார்மடம் ஆர்.சி சர்ச் அருகில் உள்ள சாமுவேல்ராஜ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது விலை உயர்ந்த வாகனங்களில் இளை ஞர்கள் செல்வதை பார்த்து, இந்த மாதிரி நாமும் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு தேவை யான பணத்திற்காக, பெரிய வீடுகள், கோவில்க ளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

    அதன் படி இருவரும் பகல் நேரங்களில் பெரிய வீடுகள், கோவில்களை நோட்டம் பார்த்து விட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிப்போம். கடந்த பிப்ரவரி மாதம் செறுகோல் கும்பளத்தில் உள்ள மஹாதேவர் கோவி லின் மதில் ஏறி குதித்து உள்ளே சென்றோம். அங்கு கொள்ளையடித்ததை, சாமுவேல் ராஜின் வீட்டின் பின்னால் ரப்பர் தோட்டத் தில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைத்து வைத்தோம்.

    தொடர்ந்து வலியாற்று முகம் இசக்கி அம்மன் ஆலயம், கன்னங்கரை ஸ்ரீவன சாஸ்தா கோவில் போன்றவற்றிலும் கை வரிசை காட்டினோம். அதன் பிறகு கோலத்து விளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் சென்று கோவிலின் பூட்டை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை அறுத்து எடுத்தோம்.

    கோவிலின் உண்டியலை உடைத்து பணம் எடுக்கும் போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திருடன்... திரு டன்... என்று சத்தம் போட்டார்கள். நான் பின் பக்கம் மதில் ஏறி தப்பி சென்றேன். சாமுவேல்ராஜ் முன்பக்கம் வழியாக தப்பி செல்லும் போது உண்டியல் பணம் மற்றும் அவனது செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை விட்டு விட்டு சென்று விட்டோம்.

    கையில் இருந்த சில்லறை காசுகளை கொண்டு ஜாலியாக செலவு செய்து சுற்றி வந்தோம். திருடிய நகை மற்றும் வெணகல விளக்குகளை ஏதாவது நகைகடையில் விற்கலாம் ஏன்று ஆலோசனை செய்து கொண்டு இருந்தோம். நேற்று மாலை சாமியார் மடம் அருகில் 2 பேரும் ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று பேசி கொண்டு இருக்கும் போது போலீசார் எங்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவ்வாறு அவன் கூறி உள்ளான்.]

    • கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர்கள் தங்கும் அறையில் 5 செல்போன் திருட்டு போனது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் பொரு த்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    இந்த நிலையில் கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனை அருகே, 3 வட மாநில வாலி பர்கள் செல்போன்களை குறைந்த விலையில் விற் பனை செய்வதாக தனிப்படை போலீஸ்சா ருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் மாலிக், பிரதாப்மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் என்பதும், அவர்கள் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர் விடுதியில் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில் இந்த வழக்கில் துப்பு துலக்க சிசிடிவி காமிராக்கள் உதவியாக இருந்தது. எனவே அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • வீடு புகுந்து தொழிலதிபரை வெட்டினர்.
    • முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் கே.கே. நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    முகமூடி கொள்ளையர்கள்

    கடந்த மாதம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் செல்வராஜ் கொள்ளையர்களை பார்த்தவுடன் கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு கூடினர். இதை கண்ட கொள்ளையர்கள் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2-வது முறையாக அப்பகுதிக்கு இரவு காரில் வந்த கொள்ளை யர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.

    அரிவாள் வெட்டு

    மேலும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் செய்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    பொது மக்கள் அச்சம்

    மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடி நடவடிக்கை எடுத்து முகமூடி கொள்ளை யர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.

    • 50 பேர் கொண்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்து உள்ளே புகுந்தது
    • இந்த கும்பல் ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது

    அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall).

    இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில் (Nordstrom Department Store), 2 நாட்களுக்கு முன் மாலை 4 மணியளவில் திடீரென சுமார் 50 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது.

    அந்த கும்பல் தங்கள் அடையாளங்களை மறைக்க பலவிதமான முகமூடிகளை அணிந்து வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாசலில் இருந்த காவலர்கள் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் ஸ்பிரேயை அடித்தனர். இதனால் அந்த காவலர்கள் செயலிழந்து நின்றனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கு ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது.

    அந்த வன்முறை கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பைகளில் போட்டு கொண்டன. கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தது. இவர்களின் வெறியாட்டத்தை கண்ட கடை ஊழியர்கள் செய்வதறியாது பயந்து நின்றனர்.

    அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேகவேகமாக வெளியேறி, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் லெக்ஸஸ் (Lexus) கார்களில் தப்பித்து சென்றனர்.

    "காட்டுமிராண்டித்தனமான ஒரு வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம். இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல. இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களை விரைவில் பிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும்" என இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியிருக்கிறார்.

    கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.

    • ரவுடி உள்பட 2 பேர் கைது
    • கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த சனிக்கிழமை காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கு களும் திருடப்பட்டிருந்தன. கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    இதை பார்த்த வேலாயுதம் காயத்துடன் கிடந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்குதலில் கணேசன் இறந்திருப்பது தெரியவந்தது.

    இசக்கியம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய கொள் ளையர்கள், மண்டைக்காடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் வெட்டு மடை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளை யர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த உருவம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர், குமார் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவாஸ்கர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட கவாஸ்கர், குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
    • பெட்டிக்கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குளச்சல், ஜூன்.18-

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலாயுதன் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் நேற்று காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கோவிலில் இருந்த குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். மேலும் கோவிலின் அருகே அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் மண்டைக்காட்டை சேர்ந்த கணேசன் (55) என்பவர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலாயுதம் படுகாயத்துடன் கிடந்த கணேசனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை தட்டிக்கேட்ட போது அவர்கள் தாக்கியதில் கணேசன் காயமடைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் மண்டைக்காடு கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவிலிலும் வெட்டுமடை பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்கள் தாக்குதலில் பெட்டிக்கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×