search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck batteries"

    • இந்த லாரிகள் மூலம் இறால் மீன் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர்.
    • 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று லாரியின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளது. இந்த லாரிகள் மூலம் இறால் மீன் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில் அனுமந்தை கிராமத்தை சேர்ந்த சகாதேவன், உதயகுமார், வேலு உள்ளிட்டோர்களின் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை அனுமந்தை டோல்கேட் அருகில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்த லாரிகளை அவர்கள் பார்த்த பொழுது அதில் 7 லாரிகளில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்றவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த லாரிகளில் திருடு போன பேட்டரிகளின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று லாரியின் உரிமை யாளர்கள் கூறுகின்றனர்.

    ×