search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணம்"

    • 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்.
    • சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை.

    தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர்.

    இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:-

    வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்.
    • கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு.

    பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • 2 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும்.
    • குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலைய சாலை பகுதியில் வசிக்கும் முகமது ஹனிபா மகன் முஸ்தபா, ஹமாத் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், நிறுவன லாபத் தொகையில் அதிக பங்கு தருவதாகவும், மேலும், 2 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும் எனவும் நம்பி ராஜகிரி ஏ.பி.எம். நகரைச் சோ்ந்த முகம்மது பாரூக் மகள் பைரோஜ் நிசா ரூ. 8 லட்சம் அளித்தாா்.

    பணத்தை பெற்றுக் கொண்ட முஸ்தபா திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறும் தஞ்சாவூா் மாவட்ட குற்றப்பிரிவில் பைரோஜ் நிசா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தற்போது தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு, விசாரணை யில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கில் முஸ்தபாவிடம் ஹமாத் டிரான்ஸ்போா்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கட்டி ஏமாற்றமடைந்து பாதிக்க ப்பட்ட முதலீட்டாளா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ராஜப்பா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் நகைக்கடைகளில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளது தெரியவந்தது.
    • உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நகைக்கடையில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு முதலீட்டு திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஜெமிலா வெற்றிக்கொடி புகார் செய்தார்.

    இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பின்னர் தஞ்சை பொருளா தார குற்றப்பி ரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நட த்தப்பட்ட விசாரணையில், அந்த நகைக்கடை செயல்பட்டு வந்த தஞ்சையிலும், அதன் கிளைகளான ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளது தெரிய வந்தது.

    எனவே, இந்த வழக்கில் அந்த நகைக்கடைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து, முதலீட்டு தொகைகள் மற்றும் தங்க நகைகள் திருப்பி தரப்படாமல் ஏமாற்ற ப்பட்டிருந்தால், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
    • பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது.

    மேலும் மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.

    இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 90 எண்களுக்கு ரூ .13.50 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    மின்மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மானியத்திற்கு விண்ணப்பித்திட விவசா யிகள் ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சாதி சான்றிதழின் நகல், ஆதித்திராவிட மற்றும் பழங்குடியினரை சேர்ந்தவராயிருப்பின் சிறு/குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், சம்மந்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கல், மின் இணைப்பு சான்றிதழின் நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஓரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15. கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் - 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட செயற்பொ றியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை- 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
    • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
    • வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆன பணிக்கு பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பகுதியில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 19 -ந் தேதி ஆகும்.

    இப்பணியில் சேர்வதற்கு இளங்கலை மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் தகுதியாகும். விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதியுடன் கிடைக்கவில்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், இயற்பியல் ஆகியவை பரிசீலிக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பத்தில் (ஐ.டி) படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விண்ணப்பிக்கும் நபர் தொடர்புடைய வட்டத்தில் உள்ள மீனவர் கிராமம், வருவாய் கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தில் தகுதியானவர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வட்டத்தில் உள்ள அண்டை கிராமத்தினரை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    வயது வரம்பு, 01.01.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாகர் மித்ர பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மீனவ கிராமங்கள் ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு ஆகிய மீனவ கிராமங்களாகும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:873/4, அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர்-613001 .

    தொலைபேசி எண் :04362-235389 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடி அருகே லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் வசிப்பவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசு வாகனத்தில் சென்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து, நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் உள்ள கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவைகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து
    • சப்-கலெக்டர் நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கைதோடு கோவில், விளாகம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 74), இவருடைய மனைவி தங்கம் (63). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் இளைய மகன் அனீஷ் (36) என்பவரோடு வசித்து வந்தனர்.

    இதில் தங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அனீஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததோடு பிரதீபா (35) என்பவரை 2-வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தாய், தந்தையான தங்கத்தையும், நீலகண்டபிள்ளையையும் அனீஷ் சரியாக கவனிக்கவில்லை. வயதான காலத்தில் மகன் கவனிப்பான் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு இது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இருவரையும் வீட்டை விட்டு மகன் அனீஷ் துரத்தி விட்டார். இதனால் அவர்கள் உறவினர்கள் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் தீர்ப்பாயத்தில் தங்கம் புகார் மனு கொடுத்தார். அதில், மகன் அனீஷ், மருமகள் பிரதீபா ஆகிய 2 பேரும் சேர்ந்து எங்களை கவனிக்காமல் வீட்டை விட்டுதுரத்தி விட்டனர்.

    எனவே எங்களது எதிர்காலம் கருதி மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

    இதில் இருதரப்பு வாதங்களையும் அவர் பதிவு செய்து கொண்டார். பெற்றோரை அனிஷ் முறையாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறியுள்ளார் என நடுவர் கவுசிக் முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து தாயார் தங்கம், மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து செய்தார். மேலும் பெற்றோரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் 'மகன் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அப்படி செய்தால் போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் ஆவணம் ரத்து செய்த உத்தரவை தக்கலை சார்பதிவாளருக்கும் அனுப்பினார்.

    • பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18-ம் தேதி அன்றும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குவதற்காக, வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு, மனநலன், கண், காது மூக்கு தொண்டை மருத்துவர் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.

    இந்த மருத்துவச் சான்று அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டு ப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் வருகிற 8-ம் தேதி ( புதன்கிழமை), பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் தேதி, பட்டுக்கோட்டை நகராட்சி கண்டியன் தெரு நடுநிலைப் பள்ளியில் 11-ம் தேதி நடைபெறுகிறது.

    இதேபோல் அம்மாபேட்டை ரெஜினா சேலி மேல்நிலைப்பள்ளியில் 14-ந் தேதி , திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் தேதி , மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17-ந் தேதி, பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18-ம் தேதி அன்றும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (5) மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றத்திற னாளிகளும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.

    மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் (2) ஆகியவற்றுடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை.
    • பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை, பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சாா்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

    தொடக்க விழாவுக்கு துணைவேந்தர் திருவள்ளு வர் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது, நம்மிடமுள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியம், வரலாறு, பண்பாடு, நாகரீகம் சாா்ந்த பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது தொடா்பாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலை க்கழகத் துணைவேந்தா்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். மேலும், அயலகத் தமிழா்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனா்.

    உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை 128 தமிழ்த் தொடா்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் சிலம்பாட்டம், நாட்டியம், நடனம், இசை, தெருக்கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.

    கற்றல், கற்பித்தல் திட்டத்தில் நிகழாண்டு முதுநிலைப் பட்டம் வழங்கவுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

    இப்பணி வருகிற மே மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்த குறுகிய காலப் பயிற்சி திட்டத்தின் கீழ் பாடங்களை எழுதி, மீளாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

    புதிய தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி நடைபெறுகிறது. முதுகலைத் தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்க ப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னா், மாநாட்டு மலரை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்பலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பெற்றுக் கொண்டாா்.

    பெரியாா் மணி யம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேலுசாமி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவா் (இலங்கை) தவரூபன், நிா்வாக இயக்குநா் (இந்தியா) பொன்னுசாமி, மாநாட்டுத் தலைவா் அப்பாசாமி முருகையன், துணைத் தலைவா் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவா் மங்கையற்கரசி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஸ்ரீவித்யா நன்றி கூறினாா்.

    ×