பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

காரைக்குடி அருகே லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் வசிப்பவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசு வாகனத்தில் சென்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் உள்ள கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவைகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com