search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Preferably"

    • ஏழை, எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.
    • இளைஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், சமையல் கலைஞர்களுக்கு இன்று பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இனிப்புகள், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறும் போது:

    இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆட்டோ டிரைவர்கள், மக்களின் பசியை போக்கி தரமான உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    ஏழை எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    இதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

    • துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் அரைகுறையாக படித்ததை வைத்து, நடப்பு நிகழ்வுகள் தெரியாமல் பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை விரும்பினால் அவர் சென்னையில் எந்த இடத்தில், எப்போது சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அங்கு நான் அவரோடு கலந்து கொண்டு விவாதிக்க தயாராக உள்ளேன். வருகிற 5-ந் தேதி துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மும்மொழி கல்வி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இணை வேந்தரான எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அண்ணாமலை பேசும்போது இது எல்லாம் அரசுக்கு தெரியும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொள்ளவில்லை.

    ஆனால் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.இந்த கூட்டத்திற்கு பின்பு தான் அந்த பொறுப்பில் சிண்டிகேட் உறுப்பினராக அவரை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது. எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பல மொழிகளை படிக்கும் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இரு மொழி கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதம், இந்தி படித்தால் அதிக ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில மொழிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கு எந்த சலுகையும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழுக்கு நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. கோவிலில் சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் போதும் என்று அண்ணாமலை சொல்வாரா? இவர்கள் நோக்கம் எல்லாம் இந்தியாவில் சமஸ்கிருதமும், இந்தியும் திணிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்ெமாழிக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பொது தேர்வு வைப்பதால், அதிக அளவு மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் ஏற்படும். இதனை தவிர்க்கவே நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கல்வி வளர்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அவற்றையெல்லாம் மறந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அண்ணாமலை விரும்பினால் நான் அவருடன் சென்னையில் ஒரே இடத்தில் பட்டிமன்றம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    • மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
    • வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆன பணிக்கு பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பகுதியில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 19 -ந் தேதி ஆகும்.

    இப்பணியில் சேர்வதற்கு இளங்கலை மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் தகுதியாகும். விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதியுடன் கிடைக்கவில்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், இயற்பியல் ஆகியவை பரிசீலிக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பத்தில் (ஐ.டி) படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விண்ணப்பிக்கும் நபர் தொடர்புடைய வட்டத்தில் உள்ள மீனவர் கிராமம், வருவாய் கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தில் தகுதியானவர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வட்டத்தில் உள்ள அண்டை கிராமத்தினரை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    வயது வரம்பு, 01.01.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாகர் மித்ர பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மீனவ கிராமங்கள் ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு ஆகிய மீனவ கிராமங்களாகும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:873/4, அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர்-613001 .

    தொலைபேசி எண் :04362-235389 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்க ளுக்கான ஆண்டு பொதுத் தேர்வு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுவை நடத்துவதற்கு ஆசிரியர்க ளை துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பா ளர் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரால் தேர்வுப் பணி ஒதுக்கப்படுகிறது.

    ஆசிரியர்களை துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும் படை போன்ற தேர்வுப்ப ணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இளையோரை துறை அலுவலராகவும், பணியில் மூத்தோரை கீழ்நிலைப் பணியில் நியமிக்கும் போது மூத்த ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அறை கண்காணிப்பாளர் பணியைத் தவிர மற்ற தேர்வுப் பணிகளில் பணிநியமன முன்னுரிமை படி நியமனம் செய்ய வேண்டும். அதே போல் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரத்திலேயே தேர்வுப் பணி வழங்க வேண்டும்.

    பெண் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதியுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வுப் பணி வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் சொந்த வசிப்பிடத்தில் தங்கி நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேர்வுப்பணி ஒதுக்கும் போது வசிப்பிடத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

    மேலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாள் மருத்துவம் செய்து வருபவர் போன்ற ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இந்த குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
    • ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் நாளை வரை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி பயன்பெறலாம். தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×