search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young people"

    • ஏழை, எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.
    • இளைஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், சமையல் கலைஞர்களுக்கு இன்று பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இனிப்புகள், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறும் போது:

    இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆட்டோ டிரைவர்கள், மக்களின் பசியை போக்கி தரமான உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    ஏழை எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    இதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

    கம்பம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓடியதையடுத்து அவரது பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டி-ஜோதி தம்பதியின் 13 வயது மகளுக்கும் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த கோபால்-வசந்தி ஆகியோரின் மகன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி சாமாண்டிபுரம் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுரேசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் பார்த்திபன் தப்பி ஓடி விட்டார். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பாண்டி, தாயார் ஜோதி மற்றும் உறவினர் கோபால் ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பார்த்திபன் மற்றும் அவரது தாய் ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமாகவே முன் வரவேண்டும் என்று ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நநி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நெடுகிலும் 41 கிராமங்கள் உள்ளன.

    தற்போது கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    சுமார் 15 அடி ஆழம் கொண்ட கால்வாயில் தண்ணீர் கரை புறண்டு ஓடுவதால் அவர்கள் நீரில் அடித்து செல்லபட்டு இறந்து போகும் அபாயம் உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஊத்துக்கோட்டை, அம்பேத் கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், மெய்யூர், தேவந்தவாக்கம் பகுதிகளை சேர்ந்த 15 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடும் போது கால்வாயை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

    இதில் அங்கம் வகிப்போர் கால்வாய் நெடுகிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கால்வாயில் யாராவது குளித்தாலோ அல்லது துணி துவைத்தால் எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

    ஆனால் இவர்கள் சரியாக கண்காணிப்பில் ஈடுபடு வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இது போன்ற உயிர் பலி சம்பவங்களை தடுக்க கால்வாய் நெடுகிலும் இருபுறங்களில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 5 அடி உயரத்துக்கு மதில் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

    ஜோசுவா ஹார்னர்

    ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதில் பேசிய கீதாஜீவன் எம்.எல்.ஏ. இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் அறிவுரை வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. விழாவில் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். பின்னர் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன்பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

    அப்போது கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில்,'' இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும். அதுவும் ஆன்மீக பணியில் ஈடுபடுவது நல்ல காரியம் கோவில் விழாவில் ஓற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி எதிர்வரும் காலத்தில் தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டும்" என்றார். 

    விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் நடராஜன், பிரதிநிதி மதியழகன், கோவில் தலைவர் முருகேசன், செயலாளர் அய்யாச்சாமி, பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சண்முகவேல்,கௌரவ ஆலோசகர் சண்முகசுந்தரம், வக்கீல் நாகராஜ், நிர்வாக கமிட்டியினர் வெற்றிவேல், முருகேசன், வேல்ராஜ், பாக்கியசெல்வன், முருகேஸ்வரன், மோகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இளைஞர்களுக்கு அ.தி.மு.க.வில்தான் எதிர்காலம் இருக்கிறது என்று மதுரையில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அவர்கள்.

    அவர் வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறார். எனவே தான் 1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க. இயக்கத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமாக சேர்ந்து வருகிறார்கள்.

    தி.மு.க.வில் உள்ள இளைஞர்களுக்கு பதவியும் கிடைக்காது. எதிர்காலமும் இல்லை. அங்கே அவர்களது வாரிசுகள்தான் பதவிக்கு வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எதிர்காலம் உண்டு.

    தேடி வந்து இளைஞர்களுக்கு பதவியை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இதை உணர்ந்த காரணத்தால்தான் அ.தி. மு.க.வில் இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். எனவே இந்த அரசுக்கும், ஆட்சிக்கும் இளைய சமுதாயம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, பரவை ராஜா, கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பாஸ்கரன், பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×