search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    கம்பம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கம்பம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓடியதையடுத்து அவரது பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டி-ஜோதி தம்பதியின் 13 வயது மகளுக்கும் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த கோபால்-வசந்தி ஆகியோரின் மகன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி சாமாண்டிபுரம் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுரேசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் பார்த்திபன் தப்பி ஓடி விட்டார். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பாண்டி, தாயார் ஜோதி மற்றும் உறவினர் கோபால் ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பார்த்திபன் மற்றும் அவரது தாய் ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×