search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிகால்"

    • சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் பேட்டியளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆத்தூர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வாரிய அதிகாரியிடம் ஆத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்து கேட்டறிந்தனர்.

    தனிக்குழு

    அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் அவை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    மேலும் தண்ணீர் வினியோகம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ், மண்டல நகராட்சி இயக்குனர் பூங்கொடி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஆத்தூர் நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட் டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நெல்லிக்குப்பத்தில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வடிகால் வாய்க் காலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஆனால் கொட்டும் மழையிலும் தேங்கி இருந்த மழை நீரில் விடாப்படியாக ஊழி யர்கள் தலையில் துண்டு அணிந்து கொண்டு சிமெண்ட் கலவை கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அறிந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் தற்போது இந்த பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதால் சில மாதங்களில் தரமற்ற பணியால் வடிகால் வாய்க்கால் இடிந்து விழுவதோடு சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் செய்யாமல் கடமைக்கு பணி செய்து வருவதாக கடந்த 3 நாட்கள் முன்பு வரை சுமார் 8 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை யினர் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் சிமெண்ட் கலவை அமைத்து வடிகால் அமைக்கும் பணியை எந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ஆகையால் கலெக்டர் அருள் தம்புராஜ், சாலை விரிவாக்க பணி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா? என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.  இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர்.  இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.

    இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • அம்மாலூர் கிராமத்தில் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
    • பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது.

    இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில் சேர்ந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி உள்ளது.

    2 நாட்களின் நீர் வடிந்தால் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேடான சித்தாளந்தூர், கடுவெளி, வெள்ளங்கால் கிராமங்களில் தண்ணீர் வடிந்து பிறகு தான் அம்மாலூர் கிராமத்தின் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.

    அதற்குள் பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரி சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சார பம்பு செட்டு அமைத்து மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வடிகால் ஆற்றில் இறைத்து இக்கிராம விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அம்மலூர் கிராம கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம், பழம் பாண்டி ஆறு பாசன கமிட்டி தலைவர் மோகன், விவசாயிகள் பாண்டி, கேட்டடி துரைராஜ், பூமிநாதன், ஜெயராமன், கணேசன், இளங்கோவன், பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
    • மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்

    கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

    மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

    எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    • வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.
    • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

    விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கராசு, சிவானந்தம், செல்வகுமார், செல்வமேரி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

    பாபநாசம் பேரூராட்சி குப்பைமேட்டில் சமுதாயக்கூடம் கட்டவேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை கட்ட வேண்டும்.

    வேம்பக்குடி கிராமத்திற்கு விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும், உர தட்டுப்பாட்டை நீக்க கோரியும் அனைத்து கிராமங்களிலும் வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் வட்டாட்சியர்

    பூங்கொடி தலைமையிலும் போலீஸ் துணை சூப்பிரண்ட் பூரணி முன்னிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை அனைத்தும் சம்மந்தப்பட்டதுறைகள் மூலம் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு சுமூக தீர்வுகள் காணப்பட்டது.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர துணை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • வாடிப்பட்டியில் 1½ மணி நேரம் கனமழை பெய்தது.
    • வடிகால் இல்லாததால் தாதம்பட்டி மந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீரென்று இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 1½ மணி நேரம் பெய்த இந்த மழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் தேங்கி குளமாக காட்சியளித்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முழுவதும் மழைவெள்ளம் சூழ்ந்தது.

    விடியவிடிய தேங்கிய மழைநீர் காலை 8 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டது. பஸ் நிலையம் உட்புறத்தில் தரைத்தளத்தில் தெற்கு பக்கம் உள்ள வணிக வளாகம் முன்பு மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்று வடிந்தது.

    தாதம்பட்டியில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் உள்ள காம்பவுண்ட் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அரிசி, பருப்பு, படுக்கைகள், துணிமணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மூழ்கி சேதமடைந்தது.

    மேலும் அங்கு 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் குடியிருப் பவர்கள் தண்ணீர் வடியும் வரை மேடான பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்தனர்.

    அதேபோல் சடையாண்டி கோவில் எதிரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரை வாலியில் இரைத்து ஊற்றினர்.

    மேலும் ஒட்டன்குளம் நிறைந்து வடிகால் இல்லாததால் தாதம்பட்டி மந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெரு மாள் கோவிலுக்குள் 3 அடிக்குதண்ணீர் புகுந்து உட்புறத்தில் சூழ்ந்து தேங்கி நின்றது.

    வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பிருந்து சடையாண்டி கோவில் வரை வாகன ஓட்டிகள் தண்ணீருக்குள் மிதந்தபடி சென்றனர்.

    எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் தொடங்கும் வடிகால் ஜெமினி பூங்கா வரை செல்கிறது. இந்த வடிகாலில் தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளது. அதற்குள் மழை நீரால் அரித்து வரப்படும் மண் தேங்கி நிற்பதால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அவல நிலை உள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகாலுக்குள் உள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரம் சாலை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.
    • ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை யை பலப்படுத்தும்பணி நடைபெற்றது.

    இத்திட்ட த்தின் கீழ் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் ஆதனூரில் 2 கிலோ மீட்டரும், கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரமும் சாலையை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.

    இப்பணியை வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் மதன், சாலை ஆய்வாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரை சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம் உட்கோட்டத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ரூ. 2 கோடி 30 லட்சத்தில் 3 கி.மீட்டர் தூரத்தில் தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளன.

    • ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 2வது வார்டு சேடபாளையத்தில், ரூ. 9.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டுதல், மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி ஆகியவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,2வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.
    • எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பெளலின் தலைமையில் நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்பாஸ்கரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளான தலைஞாயிறு பாஸ்கரன், கமல் ராம், தாணிக்கோட்டகம் காளிதாஸ், தகட்டூர் கணேசன் உட்பட ஏராளமான விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பற்றாகுறை, வடிகால் பகுதிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி வாய்கால்கள் தூர்வாரபட வேண்டும், உழவு மான்யம், டீசல் மான்யம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உதவக்கூடிய முக்கிய அரசு துறைகளான பொதுப்பணித்துறை, வடிகால் வாரியம், வேளாண்மை போன்ற துறை உயர்அதிகாரிகள் கூட்டங்களுக்கு வராமல் விவசாயிகளை புறக்கணிக்கின்றனர்.

    எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஒருமித்த குரலில் கூறினர்.

    இதற்கு பதிலளித்து பேசிய ஆர்டிஓ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்ட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள் கூட்டத்துக்கு வராத துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.துணை தாசில்தார்கள் வேதையன் வரவேற்றார்.ரமேஷ் நன்றி கூறினார்.

    ×