search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pouring rain"

    • திருமங்கலம் அருகே நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் தரைப்பாலம் மூழ்கியது.
    • வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

    டி.புதுப்பட்டி கிராமத்தி லிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் டூவிலரில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென மழைநீர் பாலத்தினை மூழ்க அடித்ததால் டூவிலருடன் தண்ணீரில் விழுந்து அலறினார்.

    தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராமமக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராமமக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது டூவிலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மேற்படி பாலத்தின் வழியாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர் .

    இதே போல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழைநீர் வயல்வெளிகளில் புகுந்த தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபாலபுரம் பகுதியில் கவுண்ட நதி குண்டாறு தூர்வாரப்படாத தால் மழை வெள்ளம் தரைப் பாலத்தின் மேல் சென்றதாகவும் ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    • ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட் டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நெல்லிக்குப்பத்தில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வடிகால் வாய்க் காலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஆனால் கொட்டும் மழையிலும் தேங்கி இருந்த மழை நீரில் விடாப்படியாக ஊழி யர்கள் தலையில் துண்டு அணிந்து கொண்டு சிமெண்ட் கலவை கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அறிந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் தற்போது இந்த பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதால் சில மாதங்களில் தரமற்ற பணியால் வடிகால் வாய்க்கால் இடிந்து விழுவதோடு சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் செய்யாமல் கடமைக்கு பணி செய்து வருவதாக கடந்த 3 நாட்கள் முன்பு வரை சுமார் 8 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை யினர் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் சிமெண்ட் கலவை அமைத்து வடிகால் அமைக்கும் பணியை எந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ஆகையால் கலெக்டர் அருள் தம்புராஜ், சாலை விரிவாக்க பணி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா? என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன.
    • சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன. பின்னர் சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    மேலும் இரவிலும் கன மழையாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் அதிக அளவில் ஓடியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் நாராயண நகர், கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்கள் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    சேலம் புறநகர்

    இதே போல சேலம் புறநகர் மாவட்டத்தில் ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம்,, சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் சற்று நிம்மதியாக தூங்கினர்.

    இதற்கிடையே சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், தாதா காப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கொசுக்கடியால் தவித்தனர்.

    56.06 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 6.4, பெத்தநாயக்கன் பாளையம் 5, சங்ககிரி 4.4, தம்மம்பட்டி 4, ஆனைமடுவு 4, கெங்கவல்லி 3, ஓமலூர் 2.1, கரியகோவில் 2, ஆத்தூர் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.06 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன.
    • முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.

     ஊட்டி:

    ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் சாா்பில்கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி நிா்வாகத்தினா் பெரும்பாலான கடைகளை கடந்த வாரம் அகற்றினா். இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இது குறித்து வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டனா்.

    இதையடுத்து, மீதமிருந்த கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். இதைக் கண்டித்து ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்களது குடும்பத்தினருடன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தினா், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய தையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. அதன் பின்னா் முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும். 

    • ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
    • பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வருவது தொடர்கின்றது.

    குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

    கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    பள்ளிகள் திறந்த பின்னரும் கனிசமான அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. கடந்த சில தினங்களாக ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது.

    ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் சுற்றுலா தலங்களை ரசித்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி, பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.f

    ×