என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் நடைபாதை வியாபாரிகள் கொட்டும் மழையில் போராட்டம்
- 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன.
- முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.
ஊட்டி:
ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் சாா்பில்கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி நிா்வாகத்தினா் பெரும்பாலான கடைகளை கடந்த வாரம் அகற்றினா். இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இது குறித்து வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டனா்.
இதையடுத்து, மீதமிருந்த கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். இதைக் கண்டித்து ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்களது குடும்பத்தினருடன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தினா், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய தையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. அதன் பின்னா் முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்