search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avinashi"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்உத்தரவின் பேரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் அனைப்புதூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நரியம்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்குமாறு சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அலுவல் நியமித்து அனைவரும் தொய்வின்றி பணி செய்ய தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்.

    • திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
    • பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வழியாக பூலக் காட்டுப்பாளையம் பைபாஸ் வரையிலான சாலையின் நடுவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

    இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன .பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இதில் பயணிக்க வேண்டி உள்ளது.

    சாலையில் தினமும் பலரும் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பலமுறை நேரிலும் டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தினமும் விபத்து நடக்கும் இச்சாலை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்ததக்கது.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டுகிறோம் என அனைத்து கட்சியினர் இணைந்து கூட்டாக கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
    • மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது,

    அவினாசி :

    கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது, தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய குழு சார்பில் மங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி ஐ டி யு .விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது.
    • வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லலை.

    அவினாசி :

    அவினாசி சூளை பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் பாதிககப்படுகின்றனர்.இதுகுறித்து எம்.பி.ஆர்.லேஅவுட் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-

    எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்கு ள்ள நூற்றுகணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கள் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.
    • சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவினாசி :

    அவினாசி அருகே குப்பாண்டம்பாளையம் கிராமம் புது ஊஞ்ச பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.

    இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் ஊர் விவரம் பற்றி தகவல் தெரிந்தால் அவினாசி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவினாசி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
    • 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அணைபுதூர் டீ-பப்ளிக் பள்ளியில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.

    இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, கிளர்க்,ஸ்டோர் கீப்பர்உள்ளிட்ட பதவிகளுக்கு 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை,ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை,தேனி ,நீலகிரி,நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம் என 11 மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் முகாம் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகாம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து ஏலத்தில் கொண்டனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மதுவிலக்கு போலீசார், அவிநாசி சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி இளங்கோவன்., மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுகுமாரன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 99 இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என ரூ. 28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா தெரிவித்தார்.

    • பூட்டை உடைத்து 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

    அவிநாசி :

    அவிநாசி சக்திநகர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரபு என்பவர் கடந்த ஜூலை மாதம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல அவிநாசி ராஜாஜி வீதியை சேர்ந்த வஹாப் என்பவர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 60 பவுன் தங்கநகை, ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    மேலும் அவிநாசி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களான கோவை கணபதி மணியகாரன்பாளையத்தில் வசித்து வரும் மதுரை காளவாசலை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன்(30), அதே பகுதியில் வசித்து வரும் மதுரை பழங்காநத்தம் தண்டக்காரன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் சதீஷ்(24), மதுரை காளவாசலை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜ்கண்ணன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 350 கிராம் தங்கம், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய முக்கியமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம் தங்க நகை திருடப்பட்டது.
    • ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு.

    அவினாசி :

    அவினாசி ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப். இவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதே போல் கடந்த 2மாதத்தில் அவினாசி மங்கலம் ரோட்டில் நடந்து செனற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.அவினாசி கமிட்டியார் காலனியில் பட்டப்பகலில் சாமிநாதன் மற்றும் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம், தங்க நகை திருடப்பட்டது.

    கமிட்டியார் காலனி மணிகண்டன் என்பவரது வீட்டில் பணம்- நகை திருட்டு, ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு, அவினாசி மங்கலம் ரோட்டில் அதிகாலையில் வாசலில் கோலம்போட்டுகொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு, நடுவச்சேரியில் பெண்ணின் வீட்டு பூட்டு உடைத்து திருட்டு என தொடர்ந்து அவினாசி வட்டாரத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திருட்டு கும்பல்பகல் நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து செல்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

    எனவே குற்றவாளிகளை பிடிக்க எஸ். பி., உத்தரவின்பேரில் தனிப்படையினர் திருப்பூர், அவினாசி சுற்றுவட்டார பகுதி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு முக்கிய வீதிகளில் சி.சி.டி.வி.கேமரா பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளியூர் செல்பவர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது.
    • இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன.

    அவிநாசி :

    அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.

    இதில் மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது:- ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க., ஆகியவை இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் புனிதமானது.அனைத்து மக்களும் ரத்த சகோதரர்கள் என்ற உணர்வை வலியுறுத்துகின்றன. பிரதமர் மோடி தேசத்தின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததால் தி.மு.க.,வில் இருக்கும் இந்து தொண்டர்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்துள்ளனர். 'பிரிவினையை முறிடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்து இந்தாண்டை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு.

    அவினாசி :

    எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து அவினாசி அவினாசிலிங்கம்பாளையம் நால்ரோடு பிரிவில் அவினாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதே போல் அவினாசியிலும் அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பழங்கரை கூட்டுறவு சங்கத் தலைவர் தனபால்,பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் சண்முகம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் அண்ணா பூபதி, ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.பி.நடராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் சுந்தர் உள்ளிட்ட அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
    • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

    அவிநாசி :

    தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

    இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

    டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

    ×