search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் புதிய சோதனை சாவடி அமைப்பு
    X

    புதிய சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

    அவினாசியில் புதிய சோதனை சாவடி அமைப்பு

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்உத்தரவின் பேரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் அனைப்புதூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நரியம்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்குமாறு சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அலுவல் நியமித்து அனைவரும் தொய்வின்றி பணி செய்ய தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×