search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games"

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நடைபெற்று வருகிறது.

    13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. பாய்மரபடகு போட்டியில் சுவேதா, வர்ஷா கவுதம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (49 இ.ஆர்.எப்.எக்ஸ் வகை) வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல பெண்கள்  ஹாக்கியிலும் வெள்ளி கிடைத்தது.

    பாய்மர படகு போட்டியில் ஹர்சிதா தோமர் (ஓபன் லேசர் 4.7 பிரிவு) வருண் தாக்கர்- கணபதி சென்னப்பா (49 இ.ஆர்) ஜோடி மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    மேலும் சவுரவ் கோ‌ஷல், ஹரீந்தர், பால்சிங் சாந்து, ரமீத் தண்டன், மகேஷ் மாங் கோகர் ஆகியோர் அடங்கிய ஸ்குவாஷ் ஆண்கள் அணி வெண்கலம் பெற்றது. இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குத்துச்சண்டையின் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டஸ்மட்டோவை சந்திக்கிறார்.

    இதில் வென்றால் அமித் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார். தோற்றால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.

    ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆங்காங்கை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி ஆங்காங்கை வீழ்த்தி தங்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் வெள்ளி கிடைக்கும்.

    ஆசிய விளையாட்டுப் போட்டி நாளையுடன் முடிகிறது. டிரையத்லான் போட்டி மட்டும் நாளை நடக்கிறது.

    இந்திய அணி இதுவரை 65 பதக்கம் பெற்றுள்ளது. இன்று 2 பதக்கம் உறுதியாகி உள்ளது. #asiangames2018
    ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியைவை சேர்ந்த சரத்கமல், சத்தியன், மனிகா பத்ரா தோல்வி அடைந்தனர். #asiangames #tabletennis #sharathkamal
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இதில் இந்திய வீரர் சரத்கமல் சீனதைபேயின் சியுயாக் சுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 7-11 என்ற செட் கணக்கில் இழந்தார்.

    2-வது செட்டை அவர் 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை (10-12)பறிகொடுத்த சரத்கமல் 4-வது செட்டில் கடுமையாக போராடினார். இதில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் அந்த செட்டை சரத்கமல் 16-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சரத்கமல் 9-11 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.

    இதனால் 3-2 என்ற கணக்கில் சீனதைபே வீரர் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சத்தியன், ஜப்பாக் வீரர் மாட்சுடை ராவுடன் தோல்வியடைந்தார்.



    இதேபோல் பெண்களுக்கான ஒற்றை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, சீனாவின் மன்யூவுடன் தோல்வியடைந்தார். #asiangames #tabletennis #sharathkamal
    ஆசிய விளையாட்டு இன்று நடக்கும் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianGames #WomensHockey
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.

    இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது.

    அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கியில் இந்தியா கடைசியாக 1982-ம் ஆண்டு தங்கம் வென்றது.

    1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்கொரியாவிடம் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றது. 2006, 2014-ம் ஆண்டுகளில் வெண் கல பதக்கம் வென்றது.

    தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது. இதுவரை 39 கோல்கள் அடித்து இருக்கிறது.

    ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டு கொடுத்து இருக்கிறது. நவ்ஜோத், நவனீத்கவுர், எக்சா, குருஜித் கவுர், மாலிக், தீபிகா, ரீனா போன்ற வீராங்கனைகள் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜப்பான் அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 36 ஆண்டுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்று சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்கள் ஹாக்கி அரை இறுதியில் இந்தியா தோற்றது. மலேசியாவிடம் ஷிட்- அவுட்டில் 6-7 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

    இதையடுத்து நாளை வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    குத்துச்சண்டை போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவில் அரைஇறுதியில் இந்திய வீரர் அமித்பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோவை சந்திக்கிறது.

    இதேபோல் ஆண்களுக்கான 75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன்- கஜகஸ்தானின் அபில்கான் அமன்குல் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    இன்று நடந்த ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ராஜ்விந்தர் கவுர் சீனதைபே வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். #AsianGames #WomensHockey
    ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

    லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் இந்த முக்கிய போட்டியில் தவறுகள் அதிகம் நிறைந்ததாக இருந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 முறை முன்னிலை பெற்றாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    முதல் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது. 6-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும், கடைசி பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணி வீரர் வருண்குமாரும் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் பைசல் சாரி 39-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முகமது ராஸி 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.


    வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை பெற்றதால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அளிக்கப்பட்ட 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. 3 வாய்ப்புகளை கோட்டை விட்டன.

    மீண்டும் சமநிலை நீடித்ததால் வெற்றியை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறை அமல்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தொடர்ச்சியாக 4 பெனால்டி வாய்ப்புகளை அடுத்தடுத்து கோலாக மாற்றியதால் பரபரப்பு மேலும் எகிறியது. 5-வது வாய்ப்பை மலேசியா கோலாக்கி முன்னிலை பெற்றது. இதன் பிறகு இந்தியாவுக்குரிய 5-வது வாய்ப்பில் சுனில் பந்தை வெளியில் அடித்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் வித்திட்டார்.

    ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 6-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது. ஆசிய போட்டியில் வாகை சூடும் அணிக்கு அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு கிட்டும். அந்த பொன்னான வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல் கண்டது.

    நாளை நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

    பெண்கள் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    கவுகாத்தி:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஹீமா தாஸ் உள்ளிட்ட மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், வேகமாக ஓடி சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று நடந்த மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் உள்ளிட்ட இந்திய மகளிர் குழுவினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஹீமா தாஸ், மச்சித்ரா, சரிதாபென் கெய்க்வாட் மற்றும் கரோத் உள்ளிட்ட மகளிர் குழுவினர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திறமையாக செயல்பட்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஓட்டலில் உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக 4 பேருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #AsianGame #Japanese
    டோக்கியோ:

    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    கொல்கத்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

    100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

    இதற்கிடையே, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா மற்றும் கொல்கத்தாவின் ஹெப்டத்லான் இளவரசியான ஸ்வப்னா பர்மனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. #AsianGames2018 #ArpinderSingh
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 10-வது தங்கம் ஆகும். உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பனோவ் (16.62மீ) வெள்ளியும், சீன வீரர் சாவ் ஷுவோ (16.56 மீ) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர்  ராகேஷ் பாபு (16.40 மீ) ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

    இந்த போட்டியின் முடிவில் இந்தியா மொத்தம் 10 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #ArpinderSingh
    ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    போபால்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்த அணியில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் பங்கு பெற்று இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்த அணியில் இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.

    ஆசிய விளையாட்டில் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். அரியானாவை சேர்ந்த வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினர், பொதுமக்கள் வரவேற்றனர். அவருக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    அவரை காதலர் சோம்வீர் ரதியும் வரவேற்க வந்து இருந்தார். அப்போது விமான நிலையத்தில் வாசலில் வினேஷ் போகத்- சோம்வீர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அங்கு அப்போது கூடியிருந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். இருவரும் கேக்கை வெட்டி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டுட்டிசந்த்- ஹிமாதாஸ் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்யெங் நகரங்களில் நடந்து வருகிறது.

    10-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் டூட்டி சந்த், ஹிமா தாஸ் பங்கேற்றனர்.

    இதில் 4-வது தகுதி சுற்றில் ஓடிய டூட்டி சந்த் 23.37 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    2-வது தகுதி சுற்றில் ஓடிய ஹிமாதாஸ் 23.47 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் நேரத்தின் அடிப்படை யில் 7-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் அரைஇறுதி போட்டி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. ஹமாதாஸ் 400 மீட்டர் ஓட்டத்திலும், டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தடகளத்தில் இன்று மாலை நடக்கும் பெண்களுக்கான 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா பங்கேற்கிறார். பெண் களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் அன்னுராணியும் கலந்து கொள்கிறார்.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது, ஆரோக்ய ராஜீவ், ஹிமாதாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி இன்று ‘லீக்’ போட்டியில் தாய்லாந்துடன் மோதியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், குருவில்லா, தன்விகன்னா ஆகிய கொண்ட இந்திய அணி 3-0 என்ற தளத்தில் வெற்றி பெற்றது. #AsianGames2018
    ×