search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி"

    • முதல் நான்கு போட்டிகளிலும் 1-5, 2-4, 1-2, 1-3 என இந்தியா தோல்வியடைந்திருந்தது.
    • இன்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் 2-3 எனத் தோல்வியடைந்தது ஒயிட்வாஷ் ஆனது.

    இந்திய ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-5, 2-4, 1-2, 1-3 எனத் தோல்வியடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எப்படியாவது ஒயிட்வாஷ் ஆவதை தடுக்க இந்தியா முயற்சித்தது. இருந்த போதிலும் 2-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி கேபடன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியா 20-வது, 38-வது மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. 53-வது நிமிடத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது.

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. என்றபோதிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    • ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 11வது நாளான இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் மோதியது.

    இதில், ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

    இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன.

    இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் (2917.87) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. 7 முதல் 10வது இடங்களை ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

    • இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.
    • தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், 5ம் நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. இதன்மூலம், போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.

    இதைதொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

    பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன்மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.

    இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.

    தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

    4ம் நாளான இன்றைய ஆட்டத்தில், முதலில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

    இதைதொடர்ந்து, இன்று மாலை 6.15 மணிக்கு 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன.

    இதனால், ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.

    • 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • 7வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

    12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன. இதில், தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    2ம் நாளில், மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தன. முதலில் நடந்த தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது.

    3ம் நாளான நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில், 4 மணிக்கு தொடங்கிய 7வது லீக் ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

    • மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
    • ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.

    இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.

    இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    தொடர்ந்து, இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
    • முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

    முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார்.

    சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
    • லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    சென்னை:

    சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும்.

    இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னைக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டு அணியை சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
    • கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

    பெவிலியனுக்கு கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.300, அதிகபட்ச விலை ரூ.400க்கும் டிக்கெட் விற்பனையாக உள்ளது.

    ×