என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பான்"
- பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
- அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறலாம் என்றது நிதி ஆயோக் அமைப்பு.
புதுடெல்லி:
கேஷியரை என்னை வந்து பாக்கச் சொல்லு என்றபடியே வங்கிக்குள் நுழைந்தார் மேனேஜர் முகுந்த். அவரது அழைப்பை ஏற்று மேனேஜர் ரூமுக்குச் சென்றார் கேஷியர் கண்ணன்.
என்ன சார் விஷயம் கூப்டீங்களே? என கேட்டார் கேஷியர்.
பொண்ணு கல்யாண விஷயம் எப்படி போயிட்டிருக்கு. நீங்க லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்க இல்லையா? என்றார் மேனேஜர்.
ஆமா சார், அதைதான் நம்பியிருக்கேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டிருக்கேன், சார் என பதில் சொன்னார் கண்ணன்.
விலைவாசி எல்லாம் பயங்கரமா ஏறிக்கிட்டு இருக்கே, எப்படி மேனேஜ் பண்ணுறீங்க என உண்மையான அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.
நாம என்ன சார் செய்ய முடியும், ஊரோடு ஒத்துவாழ் என்கிற பழமொழி நமக்குதான் நல்லா பொருந்துது. எனவே வீட்டில கலந்து பேசி தேவையில்லாத செலவை எல்லாம் குறைச்சிட்டோம் என நிலைமையை விளக்கினார்.
பரவாயில்லையே, இந்திய அரசு மாதிரி பக்காவா பிளான்போட்டு பண்ணுறீங்க போல. இந்திய அரசு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துட்டு வர திட்டங்களால நமது பொருளாதாரம் வலிமையா இருக்குது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்ல மாட்டி சின்னாபின்னமாகி வருகின்றன. ஆனாலும் இந்தியா பொருளாதாரத்தில் உறுதித்தன்மையா செயல்பட்டு வருகிறது. இதனால்தான் வளர்ந்து வரும் பொருளாதாரத்துல நாம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கோம். அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கும் வரலாம் என பெருமையுடன் கூறினார் முகுந்த்.

அப்படியா, அதைப் பத்தி சொல்லுங்களேன் சார், கேட்போம் என்ற கண்ணனுக்கு மேனேஜர் முகுந்த் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு:
உலக பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கடந்த மே மாதம் அறிவித்தார். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்கு வந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை நிதி ஆயோக் அதிகாரி வெளியிட்டார்.
இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திச் சென்று மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அவர் அறிவித்துள்ளது இந்தியர்களை தலைநிமிரச் செய்வதாகும்.
மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இத்தகைய சாதனை நடந்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
கடந்த 2014-ம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவுசெய்ய வேண்டி உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சி ஆகும்.
தனிநபர் வருவாயைப் பொறுத்தமட்டில் 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இதைத் தவிர்த்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருமளவுக்கு நமது கல்வித்தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மற்ற நாடுகளை முந்திச் சென்று இந்தியா வெற்றிபெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
பரவாயில்லையே சார், ஒரு காலத்துல எல்லா நாடும் நம்மை கேலி, கிண்டல் செய்து எதுக்குமே லாயக்கு இல்லாத இந்தியானு நம்மள மட்டம் தட்டிட்டு இருந்ததைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்போ நெலமையே வேற. பொருளாதார வளர்ச்சில நம்மளோட வளர்ச்சி பெருமையா இருக்கு சார். நானும் வீட்டுக்குக் கிளம்பறேன். போகும்போது காய்கறி வாங்கிட்டு போகனும் சார் என்றபடியே மார்க்கெட்டுக்கு புறப்பட்டான் கண்ணன்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் எச்சரித்தார்
- ஜப்பானுக்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சீனா அறிவுறுத்தியது.
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோவுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது.
தைவானை கைப்பற்ற சீனா, ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறியிருந்த நிலையில், அந்த கருத்துக்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கு சமம் என கவலை தெரிவித்து ஐநாவிடம் சீனா முறையீடு செய்துள்ளது.
- சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.
- இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.
பீஜிங்:
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.
சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன. மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள், ஸ்குவிட்கள், ஆக்டோபஸ்கள் போன்றவை அங்கிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.
இந்தநிலையில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
- மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
டோக்கியோ:
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
- ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
- சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
மேலும், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, ஜப்பான் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ஜப்பான் பிரதமரின் பேச்சு சீனா-ஜப்பான் பரிமாற்றங்களுக்கான சூழலைக் கடுமையாக பாதிக்கும். ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
- ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு, சான்ரிகு கடற்கரைக்கு அருகில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தனது எக்ஸ் பக்கத்தில் "சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே தயவுசெய்து கடற்கரையிலிருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள். எதிர்பார்த்ததை விட பெரிய சுனாமி ஏற்படக்கூடும்" என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
- ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.
எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
- ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.
டோக்கியோ:
உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.
- சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
ரஷியாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7.4 ரிக்டர் அளவில், 39.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதவு செய்துள்ளது.
கம்சட்காவில் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
கம்சட்காவுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஜப்பானுக்கு இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளான ஹவாய், சிலி, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.
- கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார் .
- புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.
கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியான இது பெரும்பாண்மையை இழந்தது.
இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஜப்பான் நாட்டுப் பிரதமர் இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.






