என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life sentences"

    • துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    அப்போது டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

    இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    துருக்கியில் 2016-ம் ஆண்டில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #Turkishcourt #tayyiperdogan
    கங்காரா:

    துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.



    இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Turkishcourt #tayyiperdogan
    இந்திய என்ஜினீயர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #USNavy #LifeSentence #IndianEngineer
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள மது பாரில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, அவரது நண்பர் அலாக் மதசானி ஆகிய 2 பேரையும் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சீனிவாஸ் குச்சிபோட்லா உயிரிழந்தார்.



    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நடந்த இந்த இனவெறி தாக்குதல், அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன் (வயது 53) உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர்மீது அங்கு உள்ள ஜான்சன் கவுண்டி மாவட்ட கோர்ட்டில் கொலை வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஆதம் புரிண்டன் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 
    ×