search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military Revolution"

    துருக்கியில் 2016-ம் ஆண்டில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #Turkishcourt #tayyiperdogan
    கங்காரா:

    துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.



    இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Turkishcourt #tayyiperdogan
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது. #PakistanElection2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஷ் செரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில் ஊழல் வழக்கில் அவர் ஜெயில் தண்டனை பெற்றார்.

    இதனால் அவர் பதவி விலகினாலும் அவரது கட்சி ஆட்சியில் நீடித்து வந்தது. கடந்த மே மாதம் 31-ந் தேதி 5 ஆண்டு ஆட்சி காலம் நிறைவு பெற்றதை அடுத்து தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் நடந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங்களுக்கும் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

    நவாஷ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி, பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் களத்தில் உள்ளன.


    முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஷ் செரீப்பின் தம்பி ஷேபாஸ் செரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்ற கட்சிகளில் இம்ரான்கான், பிலாவல் பூட்டோ ஆகியோர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. 3459 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 171 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 கோடி. அவர்கள் ஓட்டு போட 85 ஆயிரத்து 300 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முதலில் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், இப்போது நவாஷ் செரீப் கட்சியே முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில் தேர்தல் வன்முறை சம்பவங்களும் மிக அதிகமாக நடந்தது. வன்முறையில் 180 பேர் பலியாகி இருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதி முக்கிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது.

    தற்போது பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முழு அரசையும் அவர்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    நவாஷ் செரீப் கட்சி வெற்றி பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக ஏதாவது புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் ராணுவ புரட்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளன. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி என்பது புதிதல்ல.

    ஏற்கனவே லியாகத் அலிகான், பூட்டோ, நவாஷ் செரீப் ஆட்சி காலங்களில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ தளபதிகள் அபூய் கான், யாக்யாகான், ஜியா உல்ஹக், மு‌ஷரப் ஆகியோர் ராணுவ புரட்சியை மேற்கெண்டு ஆட்சியை பிடித்தனர்.

    அதேபோல் இப்போது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது, பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. #PakistanElection2018
    ×