search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turkish court"

    துருக்கியில் 2016-ம் ஆண்டில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #Turkishcourt #tayyiperdogan
    கங்காரா:

    துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.



    இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Turkishcourt #tayyiperdogan
    துருக்கியில் அமெரிக்காவுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. #U.S.pastorinTurkishjail #U.S.pastor
    அன்காரா:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரு ப்ருன்சன். பாதிரியாரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

    கடந்த 2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியின்போது சில கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஆன்ட்ரு ப்ருன்சன் கைது செய்யப்பட்டார். அவர்மீது ஆட்சியை கவிழ்க்க சதி, பயங்கரவாதிகளை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்றைய வழக்கின் விசாரணையின்போது பாதிரியார் ஆன்ட்ரு ப்ருன்சனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை ஜாமினில் விடுவிக்க மறுத்துவிட்ட நீதிபதி வழக்கின் மறுவிசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #U.S.pastorinTurkishjail #U.S.pastor
    ×