search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Election 2018"

    பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. #PakistanElection2018 #PakistanElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாகவேண்டும். எனவே, 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

    நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



    ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.

    ஓட்டுப் பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.  ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #PakistanElection2018 #PakistanElection #ImranKhan #ShabazSharif
    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. #PakistanElection #ImranKhan #ShabazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.



    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாகவேண்டும்.



    272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

    ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக களம் காண்கின்றன.

    பாகிஸ்தானைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கே அதிக அதிகாரம் உண்டு என்றாலும், ராணுவமும் ஆட்சியில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவருடைய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க ராணுவம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதனால்தான் வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு ராணுவத்தை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் தேர்தல் கமிஷனும், ராணுவமும் மறுத்துள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தான் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து உள்ளது. இதனால் அவருடைய கட்சிக்கும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்தில்தான் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளது.

    அண்மையில் எடுக்கப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் ஒன்றில், இம்ரான்கான் கட்சிக்கு 30 சதவீத ஆதரவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு 27 சதவீத ஆதரவும் மற்றொரு கருத்து கணிப்பில், நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு 26 சதவீதமும், இம்ரான்கான் கட்சிக்கு 25 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் ஆட்சி அமைப்பதில் சிறு சிறு கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

    இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    கடந்த வாரம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் குண்டுவெடித்து 151 பேர் பலியானதால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #PakistanElection #ImranKhan #ShabazSharif  #tamilnews
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது. #PakistanElection2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஷ் செரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில் ஊழல் வழக்கில் அவர் ஜெயில் தண்டனை பெற்றார்.

    இதனால் அவர் பதவி விலகினாலும் அவரது கட்சி ஆட்சியில் நீடித்து வந்தது. கடந்த மே மாதம் 31-ந் தேதி 5 ஆண்டு ஆட்சி காலம் நிறைவு பெற்றதை அடுத்து தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் நடந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங்களுக்கும் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

    நவாஷ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி, பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் களத்தில் உள்ளன.


    முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஷ் செரீப்பின் தம்பி ஷேபாஸ் செரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்ற கட்சிகளில் இம்ரான்கான், பிலாவல் பூட்டோ ஆகியோர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. 3459 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 171 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 கோடி. அவர்கள் ஓட்டு போட 85 ஆயிரத்து 300 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முதலில் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், இப்போது நவாஷ் செரீப் கட்சியே முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில் தேர்தல் வன்முறை சம்பவங்களும் மிக அதிகமாக நடந்தது. வன்முறையில் 180 பேர் பலியாகி இருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதி முக்கிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது.

    தற்போது பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முழு அரசையும் அவர்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    நவாஷ் செரீப் கட்சி வெற்றி பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக ஏதாவது புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் ராணுவ புரட்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளன. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி என்பது புதிதல்ல.

    ஏற்கனவே லியாகத் அலிகான், பூட்டோ, நவாஷ் செரீப் ஆட்சி காலங்களில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ தளபதிகள் அபூய் கான், யாக்யாகான், ஜியா உல்ஹக், மு‌ஷரப் ஆகியோர் ராணுவ புரட்சியை மேற்கெண்டு ஆட்சியை பிடித்தனர்.

    அதேபோல் இப்போது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது, பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. #PakistanElection2018
    ×