என் மலர்
உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
- துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
அப்போது டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story






