search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Navy"

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    • செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்.
    • கடந்த நவம்பரில் இருந்து 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

    செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்தியா அரபிக் கடலில் உள்ள தனது எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க போர் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் தாக்கி அழித்தது.

    பின்னர் 4 படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏற முயன்றுள்ளனர். இதனால் அமெரிக்க கப்பற்படையின் ஹெலிகாப்டர் அந்த படகுகளை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதில் மூன்று படகுகளை குறிவைத்து தாக்தி அழித்துள்ளது. ஒரு படகு தப்பிச் சென்று விட்டது. இதில் தங்களது குழுவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விளைவு குறித்தும் எச்சரித்துள்ளது.

    நவம்பர் 19-ந்தேதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல் மீது 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக அமெரிக்க கப்பற்படை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குல் நடத்தி கொன்றுள்ளது.

    அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.
    வாஷிங்டன்:

    அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது. 

    விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,  அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரான் தலைவர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #MichaelWhite
    தெக்ரான்:

    அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட் (வயது 46). இவர் அமெரிக்க கடற்படையில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் ஈரானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.

    ‘ஆன்லைன்’ மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். எனவே அந்த பெண்ணை பார்க்க கடந்த ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவர் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் ஈரானில் மஷாத் என்ற நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இவர் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. இதில் மைக்கேல் ஒயிட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தகவலை ஒயிட்டின் வக்கீல் மார்க் சயித் தெரிவித்துள்ளார். #MichaelWhite
    இந்திய என்ஜினீயர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #USNavy #LifeSentence #IndianEngineer
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள மது பாரில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, அவரது நண்பர் அலாக் மதசானி ஆகிய 2 பேரையும் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சீனிவாஸ் குச்சிபோட்லா உயிரிழந்தார்.



    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நடந்த இந்த இனவெறி தாக்குதல், அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன் (வயது 53) உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர்மீது அங்கு உள்ள ஜான்சன் கவுண்டி மாவட்ட கோர்ட்டில் கொலை வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஆதம் புரிண்டன் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 
    சிங்கப்பூர் நாட்டில் அமெரிக்க கடற்படை ஒப்பந்த நிபுணரான இந்திய வம்சாவளி பெண் ஊழலில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான குர்ஷரன் கவுர் சரோன் ரசேல் என்பவர் அமெரிக்க கடற்படை ஒப்பந்தங்கள், கணக்குகளை நிர்வகிக்கும் நிபுணராக இருந்து வந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் கப்பல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 65 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குர்ஷரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சஃபியுதீன் சருவான் அதிகாரத்தையும், நம்பிக்கையும் குர்ஷரன் தவறாக பயன்படுத்திவிட்டார் என கூறியுள்ளார். #Singapore
    ×