search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 years in jail"

    • மாடு மேய்த்து கொ ண்டிருந்த மூதாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இவ்வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன்(31). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து திருமண த்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வம் மனைவி பொன்னுத்தாய்(56) என்பவர் தவறான தகவல்களை தெரிவித்து குமரேசனுக்கு திருமணம் நடக்காமல் இடையூறு செய்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாடு மேய்த்து கொ ண்டிருந்த பொன்னு த்தாயை குமரேசன் தாக்கி ெகாலை செய்ய முய ன்றார். இது குறித்து பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் ஜெயமங்க லம் போலீசார் வழக்குபதிவு செய்து கும ரேசனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தேனி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சா ட்டப்பட்ட குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை யும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் கைகலப்பு நடந்தது.
    • விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கீழவாஞ்சூர் தனியார் மதுக்கடையில், நாகூர் பனங்குடி, சங்கமங்கலம் காலனி தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ்(வயது30) காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 16.11.2019 அன்று இரவு, கடை காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் நடந்த கைகலப்பில், காரைக்கால் நிரவியைச்சேர்ந்த காசாளர் மனோஜ், கடை ஊழியர்கள் காரைக்கால்மேடு கோபால்(39), தாமனாங்குடி அலெக்சாண்டர்(29) ஆகிய 3பேரும் சேர்ந்து விமல்ராஜை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    மறுநாள் காலை விமல்ராஜின் , உறவினர் யோசுவா இதனை பார்த்து, நாகை மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்துசென்றார். அன்று மாலை மீண்டும் உடல்நிலை பாதித்த விமல்ராஜ், மேல் சிகிச்சைக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விமல்ராஜ் இறந்துபோனார்.

    இது குறித்து, காரைக்கால் திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில், 19.11.19 அன்று, மதுக்கடைக்கு வந்த 3 பேரையும், திரு.பட்டினம் காவல்நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கைது செய்து, மாவட்ட துணை கலெக்டரும், சப்-மாஜிஸ்ரேட்டுமான ஆதர்ஷ் முன் ஆஜர்படுத்தினர். ஆதர்ஷ் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 3 பேரும், புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை இறுதிகட்ட விசாரனை முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதி அல்லி, குற்றவாளிகளான 3 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, 3 பேரையும், தற்போதைய இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் காரைக்கால் சிறையில் அடைத்தனர்.

    ஈரான் தலைவர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #MichaelWhite
    தெக்ரான்:

    அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட் (வயது 46). இவர் அமெரிக்க கடற்படையில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் ஈரானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.

    ‘ஆன்லைன்’ மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். எனவே அந்த பெண்ணை பார்க்க கடந்த ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவர் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் ஈரானில் மஷாத் என்ற நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இவர் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. இதில் மைக்கேல் ஒயிட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தகவலை ஒயிட்டின் வக்கீல் மார்க் சயித் தெரிவித்துள்ளார். #MichaelWhite
    ×