search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bar keeper"

    • காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் கைகலப்பு நடந்தது.
    • விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கீழவாஞ்சூர் தனியார் மதுக்கடையில், நாகூர் பனங்குடி, சங்கமங்கலம் காலனி தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ்(வயது30) காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 16.11.2019 அன்று இரவு, கடை காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் நடந்த கைகலப்பில், காரைக்கால் நிரவியைச்சேர்ந்த காசாளர் மனோஜ், கடை ஊழியர்கள் காரைக்கால்மேடு கோபால்(39), தாமனாங்குடி அலெக்சாண்டர்(29) ஆகிய 3பேரும் சேர்ந்து விமல்ராஜை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    மறுநாள் காலை விமல்ராஜின் , உறவினர் யோசுவா இதனை பார்த்து, நாகை மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்துசென்றார். அன்று மாலை மீண்டும் உடல்நிலை பாதித்த விமல்ராஜ், மேல் சிகிச்சைக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விமல்ராஜ் இறந்துபோனார்.

    இது குறித்து, காரைக்கால் திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில், 19.11.19 அன்று, மதுக்கடைக்கு வந்த 3 பேரையும், திரு.பட்டினம் காவல்நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கைது செய்து, மாவட்ட துணை கலெக்டரும், சப்-மாஜிஸ்ரேட்டுமான ஆதர்ஷ் முன் ஆஜர்படுத்தினர். ஆதர்ஷ் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 3 பேரும், புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை இறுதிகட்ட விசாரனை முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதி அல்லி, குற்றவாளிகளான 3 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, 3 பேரையும், தற்போதைய இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் காரைக்கால் சிறையில் அடைத்தனர்.

    ×