search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "destroyer"

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி ஆனார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிட்டமல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 66). மீனவர். இவர் நேற்று மாலை வீரா ணம் ஏரியில் படகு மூலம் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் மீனவர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

    தகவல் அறிந்த காட்டு–மன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையால் தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவையினங்களும் அழிந்து போகும் நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். #chennaitosalemgreenway

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், பாசனக் கிணறுகள், பசுமை நிறைந்த காடுகள், பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

    இதனால் வனத்தை சார்ந்த பல லட்சம் வன உயிரினங்கள் உயிர் இழக்க நேரிடும். ஏற்கனவே நகரத்தை விட்டு கிராமங்களில் ஆங்காங்கே தஞ்சமடைந்துள்ள தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவையினங்களும் அழிந்து போகும் நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பசுமை வழிச்சாலை திட்டம், தற்போதைய நிலைக்கு அவசியமற்றது. இயற்கையை அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும். ஏற்கனவே, பறவையினங்கள் அழிந்து வருகின்றன. தூக்கணாங் குருவி உள்பட பலவகை பறவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

    மற்ற பறவைகளை போல் சாதாரண குருவி என தூக்கணாங் குருவியை எண்ண வேண்டாம். இயற்கை தந்தை என்ஜினீயர். தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும்நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்ன கூடுகள் சொல்லும் கதைகள் ஏராளம்.

    தேங்காய் நார், வைக்கோல், இலைகள் என தன் கண்ணுக்கு எட்டும் எல்லாவற்றையும் தன் அலகால் எந்த அளவுக்குப் பாரம் சுமக்க முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்கு கூடு கட்டும் தூங்கணாங்குருவி அன்புக்கு உதாரணம்.

    தற்போது அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக்குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம். வானலாவிய கட்டிடங்கள் அதிகரித்துள்ளதாலும் செல்போன் கோபுரங்கள் நிறுவியதாலும் நகரங்களை விட்டு கிராமங்களை நோக்கி தூக்கணாங்குருவிகள் தஞ்சமடைந்தன.

    தற்போது கிராமங்கள், வயல் வெளிகள், காடுகளை அழிப்பதாலும் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்த தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பலவகை பறவையினங்கள் கட்டாயம் அழிந்து போகும். மண் வளம், மழை வளத்தை சீரழிக்கும் வகையில் மனிதனின் செயல்பாடுகள் உள்ளது என்று கூறினர்.  #chennaitosalemgreenway

    ×