search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிச்சயதார்த்தம்"

    • இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம்.
    • விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

    இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.

    நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

    இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    • பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
    • மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.

    இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

    தக்கலை அருகே சோக சம்பவம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோடியூர் காடு வெட்டி பகுதியை சேர்ந்தவர் அனுராஜ் (வயது26), என்ஜினீயர்.

    இவர் கடந்த 23- ம் தேதி தனது நண்பர்களுடன் கிறிஸ்மஸ் குடில் பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது.

    இதில் அனுராஜ் சாலை யில் தவறி விழுந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அனுராஜ் திருவனந்த புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கேட்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனுராஜ் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பலியான அனுராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் பார்த்து முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று (5-ந் தேதி) திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் தான் அனுராஜ் விபத்தில் சிக்கி நேற்று இறந்து விட்டார். இதனை சொல்லி உறவினர்கள் கண்ணீர் வடித்தது அங்கு வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    அனுராஜ் ஏற்கனவே தனது உடலை தானம் பண்ணுவதாக கூறியிருந்த தால், அவரது உடலை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இன்று மாலை இவரது உடல் காடு வெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்ப டுகிறது. விபத்து குறித்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×