என் மலர்
நீங்கள் தேடியது "நிச்சயதார்த்தம்"
- வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
- உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் உணவு முதல் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் நிலை உருவாகி விட்டது. இந்த நிலையில் வாலிபரும், இளம்பெண்ணும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இது உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
பெங்களுரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். அதுபோல் உடுப்பயை சேர்ந்தவர் மேக்னா. இவர்கள் இருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக நேற்று இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடத்த இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். ஆனால் சுகாசுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதையடுத்து இரு குடும்பத்தினரும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மேடையில் மணமகள் மேக்னா அமர்ந்திருந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும், சுகாசின் பெற்றோரும், உறவினர்களும் அமர்ந்து இருந்தனர். ஆனால் மணமகன் சுகாஷ் கனடாவில் இருந்தபடி ஆன்லைனில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக திருமண மண்டபத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த திரையில் சுகாஷ் தோன்றினார். அதையடுத்து சுகாஷ்- மேக்னாவுக்கு பிராமண சம்பிரதாய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தியா நேரத்திற்கும், கனடா நேரத்திற்கும் 12 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. உடுப்பியில் பகல் 12 மணிக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கனடாவில் நள்ளிரவு நேரத்தில் சுகாஷ் ஆன்லைனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை டிரம்ப் ஜூனியர் திருமணம் செய்தார்.
- இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.
டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்தனர். அத்துடன் இவர்களின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.
டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை கடந்தாண்டு முதல் காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சதார்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
- அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்றது.
விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நிவேதா மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில் அதே பாணியில் நிவேதா திருமணமும் நின்றதாக பலர் புறணி பேசி வருகின்றனர்.
- தற்போது அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தில் தான்யா நடித்து வருகிறார்.
- கருப்பன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் தான்யா நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா, தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக அறிமுகமானார். 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நடிகை தான்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு நடிகை தான்யா அறிவித்துள்ளார்.
- நிச்சதார்த்த நிகழ்வில் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை கரம் பிடிக்கவுள்ளார்.
நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
- வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள்.
- என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன்.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஒரு வாரத்திற்கு பின் அந்த ஜோடி போலீசில் சரணடைந்தனர். அப்போது நான் எனது மருமகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இவருக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.
வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். ஆனால் இங்கு வினோதமாக பெண்ணின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.
அப்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏன் மருமகனிடம் போனில் அதிக நேரம் பேசுகிறாய் என்று கணவர் கேட்டுள்ளார். திருமண ஏற்பாடு சம்பந்தமாக பேசுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சப்னா-ராகுல்குமார் ஜோடி டாடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.
லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவரும், மாமியார்களும் என்னை சித்ரவதை செய்தனர். எனது கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். எனது மகளும் என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என குற்றம்சாட்டினார். இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்றார்.
என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன். அவரை திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவோம் என்று அவர் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினார்.
ராகுல்குமார் கூறும் போது, சப்னா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக் கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சென்றேன்.
நாங்கள் முதலில் லக்னோவுக்கு சென்றோம். அங்கிருந்து முசாபர்பூருக்கு சென்றோம். போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்து சரணடைந்தோம் என்றார். சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று போலீசார் கேட்டபோது, முதலில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர் சிறிது நேர மவுனத்திற்கு பின்னர் அவரை திருமணம் செய்வேன் என்றார்.
சப்னாவின் குடும்பத்தினர் எங்களுக்கு சப்னா திரும்ப வேண்டாம். அவர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை, பணத்தை மட்டும் மீட்டு தாருங்கள் என்று போலீசாரிடம் கூறினர்.
மகளுக்கு நிச்சயித்த மருமகனையே மாமியார் திருமணம் செய்து கொள்வேன் என்ற அடம்பிடித்த இந்த சம்பவம் போலீசார் மட்டும் அல்ல அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
- இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர்.
வருகிற 16-ந்தேதி அவரது மகளுக்கு, வாலிபருடன் திருமணம் செய்ய நிச்சம் செய்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். மணப்பெண்ணின் வருங்கால கணவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார்.
அப்போது மணமகளின் தாய்க்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. மணமகளை விட அவரது தாய் அழகாக இருந்தார்.
இதனால் மயங்கிய மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். மருமகன் - மாமியார் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்தனர். அவர்களது நட்பு காதலாக மாறியது.
மணப்பெண்ணின் தாய் வருங்கால மருமகனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக அந்தப் பெண் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மாமியார் தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டு வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு ஓடி போக முடிவு செய்தார்.
திருமணத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் மருமகனுடன் ஓட்டம் பிடித்தார்.
தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்து சென்று விட்டார்.
வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்ணின் தாய் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அதிலிருந்த நகை, பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லை. இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.
இதுகுறித்து உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்
நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகை அபிநயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தற்பொழுது அவரது காதலுடன் நிச்சயம் செயத போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பெயர் வெகெசனா கார்த்திக். இவர் ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அபிநயா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோடியூர் காடு வெட்டி பகுதியை சேர்ந்தவர் அனுராஜ் (வயது26), என்ஜினீயர்.
இவர் கடந்த 23- ம் தேதி தனது நண்பர்களுடன் கிறிஸ்மஸ் குடில் பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது.
இதில் அனுராஜ் சாலை யில் தவறி விழுந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக அனுராஜ் திருவனந்த புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கேட்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனுராஜ் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பலியான அனுராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் பார்த்து முடிவு செய்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (5-ந் தேதி) திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் தான் அனுராஜ் விபத்தில் சிக்கி நேற்று இறந்து விட்டார். இதனை சொல்லி உறவினர்கள் கண்ணீர் வடித்தது அங்கு வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அனுராஜ் ஏற்கனவே தனது உடலை தானம் பண்ணுவதாக கூறியிருந்த தால், அவரது உடலை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இன்று மாலை இவரது உடல் காடு வெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்ப டுகிறது. விபத்து குறித்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
- மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
- இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம்.
- விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.
நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.
- வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.
- இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை சரத்குமார் வழங்கியுள்ளார். அப்போது ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.






