search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army"

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்தை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் மறைவிடத்தில் பதுங்கியுள்ளதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குத்தார் பகுதியில் பக்வா பிளாக்கில் பயங்க்ரவாதிகள் அமைத்துள்ள பதுங்கு குழியை கண்டுபிடித்து அழித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
    #JammuKashmir
    இந்திய முப்படைகளுக்காக ரூ.9,100 கோடி மதிப்பில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.9,100 கோடி மதிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
    பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வாகா - அட்டாரி எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். #EidMubarak #EidAlAdha #Pakistan #India
    சண்டிகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
    கடந்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்கள் கூறிக்கொண்டனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    கேரளாவில் பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடற்படை, கடலோர காவல் படை என்று அனைத்து மீட்புப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. மே மாதம் இறுதியில் பெய்யத் தொடங்கிய இந்த மழை ஆரம்பம் முதலே கனமழையாக இருந்தது.

    2½ மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கேரளா இது போன்ற மழையை எதிர்க்கொண்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் இந்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வயநாடு, இடுக்கி, எர்ணா குளம், கோழிக்கோடு, ஆலப் புழா, கண்ணூர், பத்தனம் திட்டா, கொச்சி, மலப்புரம், பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் சேதத்தை சந்தித்துள்ளது.

    இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்கள் தீவு போல காட்சி அளிக்கிறது. இங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பி விட்டன. இதுவரை 22 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 2401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையின் 5 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் செருதோணி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள கட்டிடங்களும், பாலங்களும் அடித்து செல்லப்பட்டன.

    கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை 13-ந்தேதி காலை 8.30 மணி முதல் 15-ந்தேதி காலை 8.30 மணி வரை பலத்த மற்றும் மிகப்பலத்த மழை பெய்யுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை இந்த மழை எச்சரிக்கை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு 15-ந்தேதி வரையும், ஆலப்புழா, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை வரையும், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று வரையும் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கனமழைக்கு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விட்டன. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகி விட்டது. சாலைகள் துண்டிப்பு, நிலச்சரிவு, போன்ற பாதிப்புகளால் லட்சக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர், எடக்கரா, வண்டூர் போன்ற நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு மீட்புப்படையினர் கூட செல்ல முடியாத அளவிற்கு பல இடங்கள் கடுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்து விட்டன.

    பம்பை ஆற்றில் கரை புரளும் வெள்ளம் காரணமாகவும் பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, பத்தனம்திட்டா பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.



    கேரளாவையே புரட்டிப் போட்ட இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடற்படை, கடலோர காவல் படை என்று அனைத்து மீட்புப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், எதிர்க் கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளை அறிவித்தார்.

    இந்த நிலையில் கேரள வெள்ளசேதங்களை பார்வையிட மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரள வருகிறார். அவர், ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதங்களை நேரில் பார்வையிடுகிறார். அதன் பிறகு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



    இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

    நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
    மணிப்பூரில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவம் மற்றும் போலீசாரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்கும் சிபிஐ-யிடம் சுப்ரீம் கோர்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ManipurFakeEncounterCase #CBI
    புதுடெல்லி:

    கடந்த 1979 மற்றும் 2002-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு எந்த விசாரணையும் இன்றி இருப்பதாக மீண்டும் ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் லோகுர், லலித் ஆகியோர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் வேனுகோபால், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராகினர்.

    போலி என்கவுண்டர் வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? என நீதிபதிகள் சிபிஐ இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    வழக்கில் யாரை கைது செய்ய வேண்டும் என்பதை சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், 5 குற்றப்பத்திரிகைகள் அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ இயக்குநர் உறுதியளித்தார்.

    இந்த வழக்கில் சிபிஐ-யின் விசாரணை பரமபத விளையாட்டை போல இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்கை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைக்கும் சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ராணுவத்துக்கு 55 ஆயிரம் பேரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ஆள் எடுப்பது அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை தேர்வு செய்து ராணுவத்தில் இணைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    சமீப காலமாக ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு இவ்வளவு பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, சகஸ்திரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ், தேசிய விசாரணை முகமை ஆகியவற்றில் மொத்தம் 54,953 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் ஆண்களுக்கான மொத்த காலி இடங்கள் 47,307 ஆகும். பெண்களுக்கு 7,656 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் படைக்கு 21,566 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.

    இதுபற்றி ராணுவ இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய படைப்பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த புதிய காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றார். 
    டெல்லி கண்டோன்மென்ட் எல்லைக்குட்பட்ட சாலையில் நேற்று ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ மேஜர் நிகில் ஹண்டா கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested
    லக்னோ:

    டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் நேற்று கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிரேதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

    இந்த மர்ம கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க சைலஜா விவேடி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பதும், நேற்று காலை சுமார் 10 மணியளவில் இங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்ற அரை மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.



    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராணுவ மேஜரின் மனைவி கொலை வழக்கில் நிகில் ஹண்டா என்ற சக ராணுவ மேஜர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். #Gazaprotest
    காஸா நகரம்: 

    1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

    கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த நான்கு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.

    கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.#Gazaprotest #tamilnews
    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #KashmirCeaseFire
    புதுடெல்லி:

    நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×